search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி"

    திருவாரூரில் நண்பருடன் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    திருச்சி, அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது நண்பர் பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (38). தொழிலார்கள்.இவர்கள் லாரியில் நேற்று திருவாரூர் வந்தனர். அங்கு விளமலில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் இருவரும் குளித்தனர். ஆற்றில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் சிக்கி செல்வம் பலியாகி விட்டார். இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி பலியான செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆனைமலை அருகே திருமணம் ஆகி 1 வருடத்தில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை அருகே உள்ள சின்னப்பன் பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (24). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதை சிலர் பார்த்தாக கூறினார்கள். 

    இந்த நிலையில் சுந்தரபுரியில் உள்ள ஆழியாறில் முருகானந்தம் பிணமாக மிதந்தார். அவரது உடலை ஆனைமலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×