search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ் விழா"

    காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆட்சேபம் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார். #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு  ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

    ஆனால், எதிர்ப்பு கடிதங்களுக்கு பதில் அளிக்காத பிரணாப் முகர்ஜி, தான் பேசவேண்டியதை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.  எனவே, இன்றைய விழாவில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை விழாவிற்கு செல்லும் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் பிற தலைவர்களையும் பிரணாப் சந்திக்கலாம் என தெரிகிறது. #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார்.
    பெங்களூரு:

    ஆர்.எஸ்.எஸ். சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ந் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியுமான ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. மத சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவி வகித்த நீங்கள், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


    ×