search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயத்த ஆடை"

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
    • 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

    விருதுநகர்

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான தையல் தொழிலில் முன் அனுபவமும் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    10 நபர்கள் கொண்ட குழுவாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

    பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:-

    குறைந்தபட்சம் வயது 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.

    விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

    குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பி னைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும்

    திருப்பூர்:

    சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் நடக்கிறது. வருகிற நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த கண்காட்சி உதவுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது. கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஐக்கிய அரசு நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை வளர்க்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் கூடுதல் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி 36 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2020ம் ஆண்டு 28 ஆயிரத்து 848 கோடி ரூபாய்க்கும், 2021ல் 50 ஆயிரத்து 405 கோடி ரூபாய்க்கும், பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் இருந்து 2019ல் 15 ஆயிரத்து 252 கோடி ரூபாய்க்கும், 2020ல் 12 ஆயிரத்து 423 கோடி ரூபாய்க்கும், 2021ல் 15 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடைசியாக 2021ல் ஐக்கிய அரபு நாடுகள் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் பங்களிப்பு அதிக அளவு உயரவில்லை. செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்று ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், தொழில் முனைவோர்களும் துபாயில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்று வாய்ப்புகளை குவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    • தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.
    • பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பின்னலாடை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்த மசோதா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பெருமளவு வலுசேர்க்கும். திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் என்பது பருவகாலம் சார்ந்த தொழில். முந்தைய சட்டத்தின்படி, ஆர்டர்கள் அதிகம் இருந்த காலத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்கள் அனுப்பி வைக்கும் நேரத்திலும் வேலை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

    பின்னலாடை நிறுவனங்கள் குறித்த நேரத்தில் ஆடை உற்பத்தியை முடிக்க முடியாமல் காலதாமதமாக ஆர்டர்களை முடித்து, அதை கப்பலில் அனுப்புவதற்கு பதிலாக, விமானத்தில் 10 மடங்கு கட்டணத்தை செலுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக உற்பத்தி நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நிறுவனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வேலையிழப்பு, உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.

    அதிகப்படியான நேர வேலை தருவதற்கான சூழல் இல்லாத காரணத்தால், பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் போட்டி நாடுகளுக்கு தொடர்ந்து செல்கிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை நோக்கி உலகளவில் வர்த்தக வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற அடிப்படை சீரமைப்பு நிச்சயமாக தொழில் வாய்ப்புகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும்.

    ஆயத்த ஆடை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நேரத்தில், இதுபோன்ற சட்ட திருத்தங்கள் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையை செயலாக்கிடும் பணியில் துணை நிற்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னிந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளதாவது:- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்தபடி 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வர்த்தகம் ரூ.87 லட்சம் கோடியை எட்டும். ஏற்றுமதியாளர்கள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும்போது தொழிலாளர்களுக்கு சாதகமான நேரத்தை மாற்றியமைக்க முடியும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும். இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. இந்த நடவடிக்கை மூலமாக தொழில் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்களை முடித்து அனுப்பும் சூழ்நிலையில் வேலைநேரம் அதிகரிப்பால் மிகுந்த பலன் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த நவம்பர் மாதம் இந்திய அளவிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடியே 62 லட்சத்துக்கு நடந்துள்ளது.
    • கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் முறையே 10 சதவீதம், 13 சதவீதம் குறைந்து இருந்த நிலையில் கடந்த மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மற்றும் கடந்த ஆண்டில் இருந்து தற்போது நடந்த ஏற்றுமதி வர்த்தகத்தின் அளவு குறித்து அறிவிக்கப்படும்.

    அதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்திய அளவிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடியே 62 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.7 ஆயிரத்து 987 கோடியே 32 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாத வர்த்தகம் 22.71 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் முறையே 10 சதவீதம், 13 சதவீதம் குறைந்து இருந்த நிலையில் கடந்த மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது.

    ஆனால் திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி இன்னும் மந்தகதியில் உள்ளது. முழுவீச்சில் நடைபெறும்போது இந்திய ஏற்றுமதி வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு.
    • பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருவதுடன், தற்போது குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாலிெயஸ்டர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் முன்வைத்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை சார்பில் வால்ரஸ் நிறுவனத்தலைவர் ஜிபிஎஸ். டேவிட் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது தி.மு.க.பகுதி செயலாளர்கள் போலார் சம்பத்குமார், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயத்த ஆடை தொழிலுக்கு தமிழகத்தில் செயற்கை இழை துணி வகை (பாலிெயஸ்டர் பேப்ரிக்) முன்னேற்றத்திற்கு தனி வாரியம் என்று இதுவரை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் சார்பில் முன் வைக்கிறோம்.

    பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் பாலிெயஸ்டர் ஆடைகளின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. எனவேதான் தற்போது தொழில்துறையினரில் பெரும்பாலானோர் பாலிெயஸ்டரில் இறங்கி உள்ளனர். வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் நிறுவனம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், திருப்பூரை தமிழகத்தின் முதன்மை நகரமாக மாற்றவும் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடமும் மனு கொடுக்க இருப்பதாக வால்ரஸ் டேவிட் தெரிவித்தார்.

    • பருத்தி சாகுபடி உற்பத்தி 9 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது என்றார்.
    • அரசுக்கு வரி செலுத்துவோருக்கும் சிறந்த பாலமாக திகழ வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    கோவையில் சிட்ரா எனப்படும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் 60வது தொழில்நுட்ப இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    ஜவுளித்துறையை முன்னணி தொழிலாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தொழில்நுட்ப ஜவுளி தொழில் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆயத்த ஆடை ஏற்றுமதியில்50 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்திய அளவில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு குழு ஜப்பான் சென்று ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கும், முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் இம்மாதம் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தப்படும். தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 80 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகம் ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

    மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், 100 இடங்களில் குறு ஜவுளி பூங்காக்கள், 2.5 கோடி ரூபாய் மானியத்துடன் அமைக்க திட்டமிட்டுள்ளது. 2, 3 ஏக்கர் நிலத்தில் குழுவாக இணைந்து இந்த பூங்காக்களை அமைக்கலாம்.தமிழகத்தில் இதுவரை 300 பேர் இந்த பூங்கா அமைக்க விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலித்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சேலத்தில் 109 ஏக்கரில் 500 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. பருத்தி சாகுபடி உற்பத்தி 9 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது என்றார்.

    அகில இந்திய வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு (தென் மண்டலம்) திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் சங்கம், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் வரி பயிற்சியாளர் சங்கம் ஆகியோர் சார்பில் சங்கத்தின் 46வது நிறுவன நாள் மற்றும் வரி விதிப்பு பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர் சேம்பர் ஹாலில் நடந்தது.

    இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசுகையில், நாட்டில் உள்ள தற்போதைய ஏற்றுமதி சூழல்கள் குறித்தும், குறிப்பாக திருப்பூருக்கு உண்டான ஏற்றுமதி வாய்ப்புகள், வரும் காலங்களில் 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கு, வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கை தயாராக உள்ளது. இவை ஏற்பட்டால் திருப்பூர் நகரத்துக்கு மிகுதியான ஆர்டர்கள் வரும் என்று தெரிவித்தார்.

    கோவை, இந்திய வரி பயிற்சியாளர் இன்ஸ்டிடியூட் முன்னாள் தலைவர் ஆடிட்டர் ராமசாமி பேசுகையில், வரி பயிற்சியாளர்கள் தங்களை எவ்வாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., - டி.டி.எஸ்., போன்ற வரியினங்கள் சார்ந்த அரசின் சுற்றறிக்கைகளை அவ்வப்போது தெரிந்து கொண்டு தங்களது பயிற்சியினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அரசுக்கு வரி செலுத்துவோருக்கும் சிறந்த பாலமாக திகழ வேண்டும் என்றார்.

    திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்நாட்டு விற்பனை பனியன் ஆடை உற்பத்தி செய்யும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நூல் விலை குறைந்து, புதிய ஆர்டர்கள் குவிந்து வருவதால் மீண்டும் நம்பிக்கையுடன் தொழிலை நகர்த்த அனைத்து தரப்பினரும் தயாராகி விட்டனர்.தீபாவளி பண்டிகை ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், கடைசி நேர விசாரிப்பும், விற்பனையும் கை கொடுத்தது. அதன்பின் நூல் விலை குறைந்துள்ளதால் புதிய பண்டிகை ஆர்டர்களை ஏற்கவும், பண்டிகைகால ஆடை விற்பனைக்காகவும், உற்பத்தியை துவக்கிவிட்டனர்.

    தீபாவளிக்கு அடுத்ததாக நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு. அதன்பின் தைப்பொங்கல் பண்டிகைக்கான தமிழக விற்பனை என அடுத்தடுத்த திட்டங்களுடன் பனியன் ஆடைகள் உற்பத்தி தொடங்கி விட்டது.

    தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக கடைகள் மூலமாக, இருப்பு வைத்திருந்த ஆடைகள், தமிழகம் முழுவதும் விற்பனையானது. அதனால் பெங்களூரு, சென்னை, புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மொத்த விற்பனை கடைகள் நடத்துவோர் திருப்பூருக்கு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் இருந்து பண்டிகை ஆர்டர்கள் கிடைப்பதால் உள்நாட்டு பனியன் விற்பனை நிறுவனங்கள், புது உற்சாகத்துடன் உற்பத்தியை தொடங்கி விட்டன. பிராண்டடு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் மட்டுமல்லாது, உள்ளூர் சந்தைக்கான பர்முடாஸ், பனியன் பேன்ட், டி-சர்ட், பெண்கள் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனங்களும், உற்பத்தியை துவக்கியுள்ளன. 

    • தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது.
    • வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும்.

    திருப்பூர் :

    நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ளது.நாட்டில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டு(2022-23) துவக்கம் முதல் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் இருந்தது. டாலர் மதிப்பில் கணக்கிடும்போது ஏப்ரல் - 21.44 சதவீதம், மே - 27.85 சதவீதம், ஜூன் - 49.82 சதவீதம் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. நிதியாண்டின் முதல் காலாண்டு வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவந்த ஏற்றுமதி வர்த்தகம், முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.388 பில்லியன் டாலராக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஜூலை மாதம் 1.381 பில்லியன் டாலராக 0.60 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூபாயிலும், டாலரிலும் வளர்ச்சி நிலையிலேயே காணப்பட்டது. ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, கடந்த ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதி 10,347.10 கோடி ரூபாயாக இருந்தது.

    கடந்த ஜூலை மாத ஏற்றுமதி வர்த்தகம் 10,992.26 கோடியாக 6.17 சதவீதம் உயர்ந்திருப்பது போல் தெரிகிறது. இதை வளர்ச்சியாக கருதமுடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 74.55 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு நடப்பு ஆண்டு 79.60 ரூபாயாக 6.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனாலேயே டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ள வர்த்தகம் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது உயர்ந்தது போன்று தெரிகிறது. இம்மாத இறுதி முதல் வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும். ஜூலையில் ஏற்பட்டுள்ள அரை சதவீதத்துக்கும் அதிகமான இந்த வர்த்தக சரிவு வரும் மாதங்களில் தொடர்ந்துவிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தர இந்தியா நிட்பேர் அசோசியேஷன் மற்றும் ஏ.இ.பி.சி., இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப்., கண்காட்சியை நடத்தி வருகின்றன.

    முதல்முறையாக உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்காக தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் ஆகஸ்டு 19-ந்தேதி தொடங்க உள்ளது.இதுகுறித்து இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி வருகிற ஆகஸ்டு 19-ந்தேதி துவங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள், அனைத்துவகை ஆயத்த ஆடை ரகங்கள், துணி, நூல், நார், காதி, பட்டு, ஜவுளி சார்ந்த துணை பொருட்களை 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா,டெல்லி என நாடு முழுவதும் உள்ள ஆடை வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.வணிக முகவர்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதன்மூலம் ஆடை உற்பத்தி துறையினர் தங்கள் வர்த்தகத்தை பெருக்கி கொள்ள முடியும். 98941 24744 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு அரங்குகளை புக்கிங் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×