என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் தாமதம்"
- பெண்ணுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கு முன்பாகவே பிரசவம் நடைபெற்றுள்ளது.
- தாயும், குழந்தையும் அருகிலுள்ள சமுதாய நல மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் துளசிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா மணி. பழங்குடியின பெண்ணான இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது டீசல் தீர்ந்து விட்டதால் இதனால் சரியான நேரத்திற்குள் வர இயலவில்லை.
மேலும் 4 மணி நேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
நேரம் கடந்துசெல்ல கங்காமணியின் பிரசவ வலியும் அதிகரித்துக்கொண்டே போனது.
இதைத் தொடர்ந்து சாலையோரத்தில், தன்னுடன் வந்த பெண்ணின் உதவியுடன் அவருக்கு பிரசவம் நடைபெற்றது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அதன்பின்னரே ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்பட்டது.
தாயும், குழந்தையும் அருகிலுள்ள சமுதாய நல மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நிர்மல் மாவட்ட கலெக்டர் வருண் ரெட்டி கூறும்போது,
கடைக்கோடியில் உள்ள பெண்ணின் அவரது கிராமத்திற்கு எளிதாக போய் சேர்வதற்கு வசதி இல்லை.
வழக்கமாக கர்ப்பிணிகளை முன்கூட்டியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்ப்போம்.
ஆனால் இந்தப் பெண்ணுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கு முன்பாகவே பிரசவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்துவிட்டது.
ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. எனவே அங்கேயே அவருக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது தாயும், குழந்தையும் கானாப்பூர் சமுதாய நல மையத்தில் நலமுடன் உள்ளனர்" என்றார்.
- தேவதானப்பட்டி பகுதியில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது38). இவர் புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் கருப்பசாமி வலியால் துடித்துக்ெகாண்டிருந்தார்.
இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பொதுமக்கள் மரங்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இது குறித்து அறிந்ததும் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தேவதானப்பட்டி பகுதியில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்சை அழைத்தால் வர தாமதமாகிறது.
தேவதானப்பட்டியில் இருந்த ஆம்புலன்ஸ் வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட–தாகவும் அதனால் உயிர் பலிகள் ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே இங்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்