என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆதரவற்ற பெண்களுக்கு நூறு சதவீத மானியத்துடன் இலவச ஆடுகள்
நீங்கள் தேடியது "ஆதரவற்ற பெண்களுக்கு நூறு சதவீத மானியத்துடன் இலவச ஆடுகள்"
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- திருவத்திபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது
செய்யாறு :
தமிழக அரசு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நூறு சதவீத மானியத்துடன் இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவத்திபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். கால்நடை துறை உதவி இயக்குனர் ஜான் சாமுவேல் வரவேற்றார்.
எம்எல்ஏ ஒ.ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.5.25 லட்சம் மதிப்பில் 30 பெண் பயனாளிகளுக்கு தலா 5 இலவச ஆடுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் தங்கதுரை, வெங்கட்ராகவன், சுகன்யா, ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், நகரமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X