search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ மோதி மூதாட்டி பலி"

    வேலாயுதம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது ஆட்டோ மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசம்மாள் (61). இவர் நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம்  உழவர் சந்தை அருகே சாலையை கடந்த போது வேலாயுதம் பாளையத்திலிருந்து வேகமாக வந்த ஆட்டோ ராசம்மாள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ராசம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி  வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராசம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×