search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்"

    மார்த்தாண்டத்தில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இடலாக்குடி உதிரம் பட்டியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மனைவி இசக்கியம்மாள் (60), சுதா (45) ஆகிய இருவரும் ஆட்டோவில் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

    மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து இசக்கியம்மாள், சுதா, ஆட்டோ டிரைவர் மனோகரன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

    மனோகரன், சுதா இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    ×