search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்களுக்கு கத்திக்குத்து"

    பயணிகளை ஏற்றுவது மற்றும் முன் விரோத தகராறில் 2 ஆட்டோ டிரைவர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது.
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர். இவருக்கும், இதயம் நகரைச் சேர்ந்த ஜப்பான் ராஜா (வயது 26) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. 

    சம்பவத்தன்று பி.பி.குளம் மெயின்ரோடு பகுதியில் சுரேஷ்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது ஜப்பான்ராஜா, யோகராஜ் (26) ஆகியோர் வழிமறித்து தகராறு செய்தனர்.

    அவர்கள் சுரேஷ்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜப்பான்ராஜா மற்றும் யோகராஜை கைது செய்தனர். 

    மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (32). இவரது தம்பி கார்த்திக், ஆட்டோ டிரைவர். இவருக்கும், மற்றொரு டிரைவரான நாகராஜ் என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

    இதில் நாகராஜை, சரவணன் தாக்கினார். இந்த முன்விரோதத்தில் முடக்கத்தான் கண்மாய் பகுதியில் சரவணன் நின்றபோது நாகராஜ், கருப்பு, செல்வம் ஆகியோர்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    ×