search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது"

    • முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றதால் தகராறு ஏற்பட்டது
    • இதில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் நேதாஜிநகரை சேர்ந்தவர் பிச்சைபாண்டி(50). இவர் அரசு போக்குவரத்து கழக மதுரை கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றார்.

    அப்போது ஆட்டோவில் வந்தவர்களுக்கும், பிச்சைபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கும்பல் பிச்சைபாண்டியை தாக்கி அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆட்டோ டிரைவர் மனோகரனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சதீஸ்குமார், மகுடீஸ்வரன், சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×