search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டுப்பட்டிகளில்"

    • ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் தடுப்பு நடவடிக்கைக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் கொடுமுடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவர் ெஜயலட்சுமி, கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கொடுமுடி பேரூராட்சி உதவியாளர்கள் செந்தில், பாஸ்கரன், வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தீயணைப்புத்துறை சரவணன், வனக்காவலர்கள் கீர்த்தனா, துரைராஜ் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மற்றும் மர்ம விலங்கை பிடிக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆடு வளர்ப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

    50 ஆடுகளுக்கு மேல் கால்நடைகள் வளர்ப்ப வர்கள் ஆட்டுபட்டியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி கொள்ள வேண்டும்.

    ஆடுகள் கட்ட ப்பட்டுள்ள இடங்களில் மின்விளக்கு எரிய விட்டால் வனவிலங்குகள் வராது.எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    ×