search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி பண்டிகை"

    • சிறப்பு பூஜையும், அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது.
    • முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம், ஆடி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதன்படி பல்லடம் முத்துக்குமாரசாமி மலை கோவில்,சிறப்பு பூஜையும்,அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. இதில் மாதப்பூர், பல்லடம்,பொங்கலூர்,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி பண்டிகை முன்னிட்டு மலை கோவிலில் இடுவாய் சரவணா காவடி குழுவினரின், காவடி ஆட்டம் நடைபெற்றது இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    இதேபோல பல்லடம் தண்டபாணி கோவில், அங்காளஅம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் நவகிரக கோட்டை, உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ×