search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியையிடம் நகை பறிப்பு"

    சீர்காழி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஆசிரியை கை முறிந்தது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பட்டவர்த்தி தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பாரதி (வயது 32). ஆசிரியை. அதே பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது 50). தலைமை ஆசிரியை. இருவரும் கீழபெரும்பள்ளம். அரசு உதவிபெறும் பள்ளியில் வேலைபார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பணி முடிந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பாரதி ஓட்டினார்.

    அப்போது சீர்காழியை அடுத்த காரைமேடு அருகே சென்றபோது, பின்னால் முகமுடி அணிந்தப்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர் திடீரென பாரதி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். அப்போது மொபட் கீழே சாய்ந்ததால் கலைமதியின் கையில் அடிபட்டு கை முறிந்தது.

    பிறகு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவின் காட்சிகளை வைத்து, நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    காட்பாடி மற்றும் ஆம்பூரில் போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் 20 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    காட்பாடி துரைநகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 53). திருவலத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (52). இவர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகின்றார்.

    ஜெயந்தி தினமும் வீட்டில் இருந்து சித்தூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என்று அறிமுகபடுத்தி கொண்டு நாங்கள் மப்டியில் இருப்பதாக கூறி நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து சென்றால் யாராவது உங்கள் நகையை பறித்து சென்று விடுவார்கள் எனவே நீங்கள் அணிந்து உள்ள நகைகளை கழட்டி பையில் வைக்குமாறு கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய ஜெயந்தி தான் அணிந்திருந்த 16 பவுன் நகையை கழட்டி உள்ளார். அப்போது அவர்கள் நாங்கள் பேப்பரில் மடித்து கொடுப்பதாக கூறி ஒரு பொட்டலத்தை ஜெயந்தி வைத்திருந்த பையில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறுது தூரம் சென்ற ஜெயந்தி பையில் வைத்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி உள்ள கண்காணிப்பு காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவரது மனைவி சுந்தரா (வயது 50). இவர் இன்று காலை ஆம்பூர் மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என கூறி. சுந்தரா அணிந்திருந்த நகையை கழட்டி பையில் வைக்கும்படி கூறி 4 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் நகை பறித்து சென்றது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆசிரியையிடம் 2 வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆவூர் ஆலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா (வயது 31). இவர் நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கவிதா தனது தாய் பார்வதியுடன் கும்பகோணம் சென்றார். அங்கு கடைவீதியில் பொருட்கள் வாங்கி கொண்டு மொபட்டியில் தாயுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது பட்டீஸ்வரம் அருகே தேனாம்படுகை என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கவிதாவை வழிமறித்தனர். பின்னர் திடீரென அவர்கள் 2 பேரும், கவிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி கவிதா, பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியையிடம் 2 வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர் ஜெய்பாவாய் மாநகராட்சி பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை இவர் குத்தூஸ்புரம் அருகே மொபட்டில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வளர்மதியிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பு நபர்களை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் வாகன தணிக்கையின் போது 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (44), நல்லூரை சேர்ந்த பார்த்தீபன் (40) என்பதும், இவர்கள் தான், ஆசிரியை வளர்மதியிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பூர் ஊரகம், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 2 நகை பறிப்பு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ரமேஷ், பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காரைக்கேணி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி வைகை (வயது 58). ஓய்வு பெற்ற ஆசிரியை.

    இவர் இன்று காலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கமீனாள் என்பவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். ஒருவன் ஹெல்மேட் அணிந்திருக்க, மற்றொருவன் குல்லா போட்டிருந்தான்.

    அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து வைகை கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வைகை திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிச் சென்றனர். ஆலம்பட்டி விலக்கு வரை விரட்டியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் வைகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மேக்காமண்டபம் மயிலோடும் பாறை விளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். இவரது மனைவி ஜெசி ஜெயனேட் (வயது 78), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஜெசி ஜெயனேட் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெசி ஜெயனேட்டிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

    செயின் பறிப்பு குறித்து ஜெசி ஜெயனேட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×