search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரி"

    தூண்டில் போட்டு மீன்பிடித்த படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கடலில் மூழ்கி பலியானார்.
    மணவாளக்குறிச்சி:

    குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது34). மீனவர். தினேஷ் நேற்று மாலை முட்டத்தில் உள்ள மீன்பிடி துறை முகத்திற்கு சென்றார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் இருந்தபடி கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்தார். அப்போது எதிர் பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்தார். தினேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் விழுந்த தினேசை மீட்க முயன்றனர்.

    அதற்குள் தினேஷ் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது பற்றி குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×