search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகர் கோவில் ஆடித்திருவிழா"

    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி, கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருந்திருவிழா. இந்த வருடத்திற்கான விழா கோவிலில் வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.

    28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×