search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணா ஜெகதீசன்"

    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • இந்த அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை மே மாதம் 18-ம் தேதி சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    ×