search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாளால் வெட்டு"

    • பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் பெண் சத்துணவு அமைப்பாளர் தனது கணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதன் பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவம் குறித்து வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி :

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கலப்பம்பாடியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மள். இவர்களுக்கு சுப்பரமணி, மாதையன், சேட்டு ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இதில் மாதையன் தனது மனைவி லதாவுடன் பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார்.

    மாதையன்-லதா தம்பதியினருக்கு ஜெயப்பிரியங்கா (25) என்ற மகளும், தமிழ்குமரன் (22) என்ற மகனும் உள்ளனர். லதா எட்டிகுழி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பா ளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் லதாவின் நடந்தையில் சந்தேகம் அடைந்த மாதையன், தனது மனைவியை கண்டித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மாதையனுக்கும், லதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்ப வத்தன்று இருவருக்கும் மீண்டும் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த லதா தனது கணவன் மாதையனை அரிவாளால் எடுத்து கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதனால் மாதையன் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ராஜி அங்கு ஓடிவந்து பார்த்தபோது, தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அங்கிருந்து லதா தப்பி ஓடி விட்டார்.

    உடனே ராஜி அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராஜி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் தலைம றைவாக உள்ள லதாவை தேடிவருகின்றனர். குடும்ப தகராறில் கணவனை, மனைவி அரிவாளல் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வெம்பாக்கம்:

    வந்தவாசி நல்லூர் சேர்ந்தவர் வரதன் (வயது 42) மாற்றுத்திறனாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் தங்கி உள்ளார்.

    இன்று காலை இயற்கை உபாதை கழித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வரதனை சரமாரியாக வெட்டினர்.

    ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை வருவதை பார்த்த மர்ம கும்பல் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வரதனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முன்விரோதம் காரணமாக வரதனை கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ×