search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு டாக்டர்கள் போராட்டம்"

    • புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது.
    • முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர் சீனிவாசன், ஜெஸ்வின், ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அறிவித்த 293 அரசாணையை 21 மாதமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும், முதமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைத்திருப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது. அதனை உடனே அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள். அதனை கண்டிக்கிறோம்.

    முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
    • முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    சென்னை:

    அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    அரசு மருத்துவர்களுக்கு, அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளில் 4 ஊதியப்பட்டை வழங்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தற்போது முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

    அப்போது அவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இது கருணாநிதி போட்ட அரசாணையாகும். இதையும் முதல்-அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாணை நிறைவேற்றப்படாததால் இந்தியாவிலேயே தமிழக அரசு மருத்துவர்கள் குறைவான சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து வருகிறோம்.

    இது போன்று மேலும் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்திருக்கிறோம்.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கலைஞர் மீண்டும் உயிர் பெற்று வரக்கோரி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி மவுன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தமிழக முதல்-அமைச்சர், மருத்துவர்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடுத்த கட்டமாக நேற்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் 4 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றியபடி நூதன முறையில் போராடி வருகிறார்கள்.
    • அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்துள்ளனர். இந்த கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் 10 நாட்கள் நடக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பொது சுகாதாரத்துறை பணி நேரம் தொழிலாளர் விதிகளுக்கு புறம்பான வகையில் நீடிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு ஊக்கத் தொகை உயர்வுக்கு தனி அரசாணை வெளியிட வேண்டும்.

    மருத்துவர்கள் சேமநல நிதி திட்டத்தில் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் முயற்சியால் 11 ஆயிரம் மருத்துவர்கள் சேர்ந்த பிறகும் பயனாளிகளுக்கு சேம நலநிதி உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.எச், டி.எம்.எஸ், டி.எம்.இ. நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் அனைத்து அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறினார்கள்.

    மேலும் அனைத்து தரப்பு அலுவலக சந்திப்புகள், நிகழ்வுகள், முகாம்களில் பங்கேற்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதன் அடுத்த கட்டமாக நேற்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் 4 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றியபடி நூதன முறையில் போராடி வருகிறார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்துள்ளனர். இந்த கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் 10 நாட்கள் நடக்கிறது.

    மேலும் வருகிற 25-ந் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். #DoctorsStrike
    சென்னை:

    தமிழகம் முழுவதும் நாளை அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெருமாள் கூறி இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தமிழக அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசு டாக்டர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளி வரை காத்திருக்குமாறு கூறினார்கள். இருப்பினும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். புறநோயாளிகளின் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 7-ந்தேதி வரை கூட்டங்களை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந்தேதி முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாடு அரசாங்க மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

    முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும்.

    நாடு முழுவதும் ஏறத்தாழ 6000 முதல் 10000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ள நிலையில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DoctorsStrike
    ×