search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள் போரட்டம்"

    ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath #jactogeo #teachersprotest

    சீர்காழி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தருமை ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட செயல் படக்கூடிய திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி சட்டநாதர் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தாமல் கால தாமதித்து வருவது என்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

    ஜேக்டோ-ஜியோ அமைப்பு எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப்பட்டு வருகிறது. ஜேக்டோ ஜியோ அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தினை சீர்குலைக்க வேண்டும், மக்களுக்கு அரசாங்கத்தின் எந்த நல்ல திட்டங்களும் சென்றடைய கூடாது என உள்நோக்கத்துடன் ஒரு சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஜேக்டோ- ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும்.

    தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் வரக்கூடிய இந்த சூழ்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளக் கூடிய அவசர கால சூழ்நிலையில் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தினை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.


    ஜேக்டோ- ஜியோ போராட்டத்தினை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசால் நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்களையும், போக்குவரத்து ஊழியர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்கட்சிகள், சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #arjunsampath  #jactogeo #teachersprotest

    பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என் அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. #JACTTOGEO
    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க கீழ்ப்பாக்கத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு இன்று நடைபெற்றது.

    இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பென்சன் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை சட்டசபையில் நிறைவேற்றுவதாக அறிவித்த பிறகும் இன்னும் செயல்படுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

    அதன்பிறகு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அரசிடம் போராடி வருகிறோம். ஊதிய முரண்பாடு, பென்சன், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மீண்டும் டிசம்பர் 4-ந்தேதி முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக சட்டசபையில் வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதியை கூட இன்னும் நிறைவேற்றாமல் உள்ளனர். அதனால்தான் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்கள் போராட்டத்தில் 106 சங்கங்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன.

    புயலால் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்படும். அந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கஜா புயல் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமவேலை, சம ஊதியம் வழங்காவிட்டால் டிசம்பர் 23-ந்தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    ×