search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் விமர்சனம்"

    சர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ADMK #Sarkar #Vijay
    சென்னை:

    நடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ பட டைட்டிலின் கீழ் ‘டைம் டூ லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்கிற வார்த்தைகளுக்கு அரசியல் பின்னணியில் இருந்து கடும் எதிர்ப்புகள் சத்தமில்லாமல் எழுந்தது. பின்னர் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்ட பின்னரே தலைவா படம் வெளியானது.

    கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கிண்டல் செய்தும் விஜய் பேசிய வசனங்கள் தீப்பொறியை கிளப்பின. மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.


    சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்- அமைச்சராக வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் போல ராதா ரவியின் கதாபாத்திரம் அமைச்சராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் இருவரிடமும் விஜய் காரசாரமாக அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தமிழக அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றை சரமாரியாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டியதே காரணம் என்றும் படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் துறைகளில் இருப்பவர்கள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்த பின்னரே விழித்துக் கொள்வது போலவும் விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

    அரசு பஸ் மோதி ஒருவரின் கால்கள் துண்டாவது போன்ற காட்சியில், அனுபவம் இல்லாத டிரைவரை வைத்து பஸ் ஓட்டியதே காரணமாக கூறப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கும் குழந்தையை காப்பாற்றப் போகும் வாலிபர் பலியாவது போன்ற காட்சியில் மின்சார துறையை சாடியுள்ளனர்.

    ‘சர்கார்’ படத்தில் துணிச்சலாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சாடியிருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விட்டார்கள் என்பதற்காக விஜய் நடத்தும் போராட்டமே படத்தின் கதை.

    அரசியல்வாதிகள் எப்படி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதை ராதா ரவி கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

    அரசியல் மாநாடு காட்சியில் அரசியல்வாதியான பழ.கருப்பையாவிடம் விஜய் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் வரவேற்பு அதிகம். நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார்.

    அதற்கு “இதெல்லாம் வைச்சு தான் எங்களுக்குப் பணமே வருது. அதுலயே கை வைச்சா” என்று நீண்ட வசனம் பேசுவார் பழ.கருப்பையா. அதுதற்கால அரசியலை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது.


    கந்து வட்டியால் நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையில் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.


    அதே போல் ‘சர்கார்’ படத்தில் வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி. இதில் ஒரு பின்னணி இருக்கிறது. மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவின் இளம் வயது பெயர் கோமளவல்லி என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.

    இலவசங்கள் கொடுத்து சீரழிக்கிறார்கள் என்ற காட்சியில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச மிக்ஸியை எடுத்து தீயில் வீசுவார். படத்தின் முதல் பாதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் அறிவித்தாலும், இலவசங்கள் கொடுத்தாலும் அதில் என் தலைவனின் புகைப்படத்தை ஒட்டி ஒட்டி அனைத்து மக்களின் மூளையிலும் என் தலைவன் முகத்தை கொண்டு போய் பிராண்ட் பண்ணியிருக்கேன்டா என்ற வசனம் பேசுவார் ராதாரவி. அதெல்லாம் இனி எடுபடாது என்பார் விஜய்.

    விஜய் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை படம் உணர்த்துகிறது. இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.

    இதுபோன்ற சர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்து உள்ளனர். #ADMK #Sarkar #Vijay
    அரசியல், பொருளாதார விமர்சனங்கள் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் காலம் வரவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கவிதா பதிப்பகம் மூலம் ப.சிதம்பரம் எம்.பி. எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகத்தையும், அதை தமிழாக்கம் செய்து எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் மொழிபெயர்த்த ‘வாய்மையே வெல்லும்’ என்ற புத்தகத்தையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வித்யோத்யா பள்ளி அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

    நூல்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:-


    நான் ஆங்கிலத்தில் எழுதியது பஞ்சாபி, உருது, இந்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அன்றே மொழிபெயர்க்கப்பட்டு அந்த வாரமே வெளிவருகிறது. ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுகிறோம். ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழிபெயர்ப்பு செய்யாமல், தமிழிலேயே இக்கட்டுரையை எழுதிட முடியுமா? என்பது தான் அது.

    என்றாவது ஒரு நாள் தமிழிலே ஒரு கட்டுரை எழுத முயற்சிக்கிறேன். காலம் தான் அதற்கு விடை. கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம் என எல்லாமே இலக்கியம். ஆனால் தமிழில் எனக்கு தெரிந்தவரை விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஆய்வு கட்டுரைகளும் அப்படி அல்ல.

    ஆங்கிலத்தில் வால்டர் விட்மன் என்ற கவிஞர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற அரசியல் விமர்சகர். அவரது எழுத்து மற்றும் அரசியல் விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை போல தமிழ் உள்பட பிறமொழிகளிலும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சனங்களும் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு காலம் வரவேண்டும். அப்போது தான் ஒரு பெருமை, நீடித்த புகழ் கிடைக்கும்.

    ராஜாஜி, இமாம் நசாலி, கே.ரங்கசாமி, ஜி.கே.ரெட்டி, குல்ஜீத் நாயர் போன்றவர்கள் மிக தரமான அரசியல் விமர்சகர்கள். அவர்களது எழுத்துகள் இலக்கியமாகவில்லை. அது நடக்கவேண்டும். நீங்கள் சும்மா இருக்கக்கூடாதா? ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? என்று நண்பர்கள் கூறுகிறார்கள். சும்மா என்ற வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை உண்டா? அது எந்த மொழியிலும் இல்லை.

    சும்மானா என்ன? சும்மா இருப்பது சுகம் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் சும்மா எப்படி இருக்கமுடியும்? நான் சும்மா இருக்கமுடியாது. என்றைக்கு யானையின் துதிக்கை சும்மா இருக்குமோ, அன்றைக்குத்தான் நானும் சும்மா இருப்பேன். நான் எழுதுவதற்கு காரணங்களை சொல்வதை விட, உதாரணங்களை தான் அதிகம் சொல்கிறேன். எழுதுவதற்கான காரணங்களை அந்த உதாரணங்களில் இருந்து புரிந்துகொள்ளுங்கள்.

    அரசு துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.

    ஒரு குழந்தையின் முதல் 5 ஆண்டுகளில் கொடுக்கப்படும் கவனிப்பே அவர்களது வாழ்க்கைக்கான உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம். இந்தியாவில் 2-ல் ஒரு குழந்தை ரத்தசோகையுடனும், 3-ல் ஒரு குழந்தை எடை குறைவுடனும், 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்கிறது. ஒரு குழந்தை இந்தியாவில் முழு மனிதனாக வரவே முடியாது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1.20 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 25 லட்சம் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் அரை மனிதனாக, குறை மனிதனாக வாழ்கிறார்கள். இது தான் சோகமான நிலைமை.

    சாதி. சாதி, இந்து அமைப்பை நிர்வகித்து ஒழுங்குபடுத்துகிறது என்று இந்த 21-ம் நூற்றாண்டில் ஒரு முதல்-அமைச்சர் கூறுகிறார். இந்த கொடுமை ஒழியவேண்டும் என்றால் அனைவரும் எழுதவேண்டும், அனைவரும் பேசவேண்டும். என்ன எழுதவேண்டும் என்று நினைக்கவேண்டாம். உங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள். நண்பருக்கு ஒரு லெட்டர் எழுதுங்கள். என்ன நடக்கிறது? என்பதை பகிருங்கள். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம், ஊமைத்துறையாக அடங்கி இருக்கும் சமுதாயத்தில் எழுத்தும், பேச்சும் ஊன்றுகோலாக வேண்டும். அப்போது தான் சமுதாய சீரழிவுகள், அரசியல் ஒழுங்கீனங்கள், பொருளாதார தவறுகள் களையும் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதற்காகவே பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ரஜினியின் காலா படத்தில் அனல் தெறிக்கும் வரிகள் இடம் பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. #Rajinikanth #Kaala
    சென்னை:

    ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் காலா என்பதால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட காலா பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளன. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காலா பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வருகிறார்கள்.

    உரிமையை மீட்போம், தெருவிளக்கு என தொடங்கும் பாடல்களில் அரசியல் வரிகள் அதிகம் உள்ளன. தெருவிளக்கு பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

    சமூத்துவம் பிறந்திட... விடுதலை கிடைத்திட... தோழா இணைந்து போராடு. உணவு, ஆடை, வீடு போல வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை போன்ற வரிகள் கவனம் ஈர்க்கின்றன.

    உரிமையை மீட்போம் பாடலில் இனியும் பயந்தால் ஆகாது என்பது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. நிலமே எங்கள் உரிமை, யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா, இங்கே வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா, ‘அடங்கி வாழ்ந் தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா’ என்பது போன்ற வரிகள் ரஜினியின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை ஊர்ஜித படுத்துவது போல உள்ளது.

    போராடுவோம் பாடலில் தமிழகத்தில் சிலை வடிவமைப்பதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த கருத்துகளும் காரசாரமாக இடம் பெற்றுள்ளன.

    ‘காணிக்கை என்ற பெயரில் கல் சிலைக்கு லஞ்சம் கோடி, கோடியா குமியுது உண்டியலில். நாட்டில் ஆனா பஞ்சம். நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்துவிட்டோம். மனிதாபிமானத்தை மறந்து விட்டோம். உரிமை இழந்து விட்டோம். ஏழை உயிர் என்றால் அலட்சியம். பணம் தான் நோயின் மருத்துவம். நிலம், நீர் எங்கள் உரிமை. போராடுவோம், எங்கள் வறுமை ஒழிய போராடுவோம். புது புரட்சி உருவாக போராடுவோம்’ என்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் காலா பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது பாடல்கள் மூலம் கலகத்தை ஏற்படுத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது காலா படம் வெளியாகும் முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Rajinikanth #Kaala
    ×