search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கேற்ற விழா"

    • கொங்கு மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இரு மாதங்களாக பயிற்சி பெற்று பாரம்பரியத்தை மீட்டுள்ளனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையத்தில் ஊர்மக்கள் சார்பில், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. இதையடுத்து அ.குரும்பபாளையம் குழு வள்ளிக் கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அ.குரும்பபாளையம் ஊர் தலைவர் பி.சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி அறங்காவலர் கே.வெங்கடாசலம், ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கணேசன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். காவல் ஆய்வாளர் சரஸ்வதி வள்ளி கும்மியாட்ட குழுவினருக்கு பரிசு வழங்கினார்.

    பயிற்சி அளித்த சாமிக்கவுண்டம்பாளையம் வேலவன் வள்ளி கும்மி கலைக்குழு மற்றும் ஆய்வு மைய ஆசிரியர் எஸ்.ஏ.ராமசாமி, நடன ஆசிரியர் எஸ்.ஆர்.விக்னேஸ்குமார் ஆகியோர் கூறியதாவது:-குழு சார்பில் இது வரை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமே வள்ளிக்கும்மியில் இடம் பெற்று வந்த நிலையில், குழு சார்பில் 2009 ஆம் ஆண்டு முதல் பெண்களையும் இணைத்து இக்கலையை வளர்த்து வருகிறோம். மேலும் அ.குரும்பபாளையத்தில் நடைபெற்ற பயிற்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 60 வயதுக்கும் மேற்பட்டோர் இரு மாதங்களாக பயிற்சி பெற்று பாரம்பரியத்தை மீட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற அரங்கேற்றத்தில், வள்ளி பிறந்தது முதல் முருகனை திருமணம் செய்து கொண்டது வரையிலான கதை, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, மது, புகைப்பிடித்தல் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து நடனம், பாடல் வடிவில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சாமி கதைகள் ஆகியவை மேளங்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. என்றார். மாலை தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    • கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
    • சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் அருகே உகாயனூர் ஊராட்சியில் உள்ள நல்லகாளிபாளையத்தில் மங்கை வள்ளி கும்மி 34-வது குழுவினரின் அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் நன்றாக பழகிய நிலையில் அதை சிறப்பு செய்யும் விதமாக அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை கற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடப்பட்டு பயிற்சி தரப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

    ×