search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு"

    • ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி நகரில் உள்ள மதிகோண்பாளையம் சக்தி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் பாலாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய கயிறு உள்ளிட்ட சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதே போல் வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில்,வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், இலக்கியம்பட்டி புற்று நாகர்கோவில்,சாலை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கொளகத்தூர் பச்சையம்மன் கோவில், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    குமாரசாமிபேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 3-வது ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை ஒட்டி நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு மங்கள இசை உடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×