என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்"
- மதுரை ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் போல சென்ற தி.மு.க.வினர் திடீரென்று அங்கு நின்றிருந்த செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று பா.ஜ.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
- தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி 21 பேரை கைது செய்தனர்.
மதுரை:
ஜம்மு-காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பலியானார். அவரது உடல் நேற்று தனிவிமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையொட்டி ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ராணுவ உயர் அதிகாரிகள் திரண்டிருந்தனர்.
விமான நிலையத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் குவிந்திருந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தான் முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும். மற்றவர்கள் ராணுவ வீரர் வீட்டுக்கு சென்று தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.
இதற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வீரமரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்தலாம் என்று கூறி அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
பின்னர் அமைச்சர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் கார் மீது செருப்பை வீசினர்.
இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் குறித்து கண்டறிந்தனர். இதுசம்பந்தமாக பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துறை குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சி கோபிநாத், ஜெயகிருஷ்ணா, மற்றொரு கோபிநாத், முகமது யாகூப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன், பா.ஜ.க மகளிர் பிரிவை சேர்ந்த தனலட்சுமி, மாலா, சரண்யா உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை தி.மு.க.வினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
அப்போது பிரதமர் மோடி படங்களை கிழித்து கண்டன கோஷம் எழுப்பினர். மேலவெளிவீதி, ஆண்டாள்புரம் உள்ளிட்ட இடங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரகனூர் ரிங் ரோட்டில் தொழில் நுட்ப பிரிவு தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசப்பிரபு தலைமையில் அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர். இதுதொடர்பாக 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் நேற்று மாலை மதுரை ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் போல சென்ற தி.மு.க.வினர் திடீரென்று அங்கு நின்றிருந்த செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று பா.ஜ.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி 21 பேரை கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
- மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்துவேன்.
ராமேசுவரம்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று ராமேசுவரத்தில் மீனவர்களுடன் படகில் சென்று சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்கவும், இலங்கை கடற்படை சேதப்படுத்திய படகுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் மத்திய இணை மந்திரி முருகன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் விரும்பதகாத செயல். நான் வருவதற்கு முன்பே இந்த சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இந்த சம்பவத்துக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பா.ஜனதா கட்சியை விட்டு சென்றது அவரது விருப்பம். கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிலர் அப்பாவிகள். அவர்கள் மீது வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்