search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா விலகல்"

    சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #ArmsTradeTreaty
    வாஷிங்டன்:

    ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது.

    2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ந்தேதி அமலுக்கு வந்தது.

    இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இந்த ஒப்பந்தம், டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் இருந்து அமெரிக்கா விலகுவது பற்றி அவர் பரிசீலித்து வந்தார்.

    இந்த நிலையில், இண்டியானாபொலிஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ நோட்டீசை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.  #DonaldTrump #ArmsTradeTreaty 
    ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #UNRightsCouncil #America
    வாஷிங்டன்:

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

    மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது.

    ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. #UNRightsCouncil #America
    ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், பெட்ரோல், டீசல் விலை உயரும். பணவீக்கமும் அதிகரிக்கும். #IranNuclearDeal #PetrolDieselPrice
    ஹாங்காங்:

    ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முன்தினம் விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது.

    இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே சார்ந்து உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக ஈரான் திகழ்ந்து வருகிறது.



    இப்போது ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதால், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்காது. ஏனென்றால், அமெரிக்காவை போன்று ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்காதது வரையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்காது.

    ஈரானிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணெய்க்கான விலையை ஐரோப்பிய வங்கிகள் வழியாகத்தான் இந்தியா கொடுத்து வருகிறது. அவற்றை தடை செய்யாத வரையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடரும்.

    தற்போது ஈரானில் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

    ஈரான் அதிபர் ரூஹானி சமீபத்தில் இந்தியா வந்து சென்றபோது, 2018-19 ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 96 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, ஈரான் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும்.

    ஏற்கனவே அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடும் என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை உயரத் தொடங்கி விட்டது. கடந்த 3½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு அமைந்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு (சுமார் ரூ.5,200) உயரும் என்ற பேச்சு உள்ளது.

    நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.

    அமெரிக்கா விலகலுக்கு முன்பாகவே எரிபொருள் விலை 20 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் நிலை உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோது, அது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43 ஆகவும், டீசல் விலை ரூ.69.56 ஆகவும் உள்ளது. இந்த விலை மேலும் உயர்கிறபோது, அது சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பண வீக்கம் எகிறும் எல்லா பொருட்களின் விலைகளும் உயரும். நாட்டின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.  #IranNuclearDeal #PetrolDieselPrice  #Tamilnews

    ×