search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாயம்"

    • இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அரூர்,

    தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை ரூ.410 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 4 வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க அரசு மூலமா ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதில் 8 ஒப்பந்ததாரர்கள் இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது ஜல்லிக்கற்கள் மண்கள் கொட்டி சாலை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசு ஒப்பந்தங்கள் விடப்பட்டு சாலை பணியில் சிறப்பாக முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துறை சார்ந்த அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் சாலை அமைக்கும் பணியை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அரசு அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாலையின்மேல் சாலை போடும் பணியை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் தொடங்கி திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரை வடிகால் வசதி அமைக்கப்படும் பகுதிகளில் முறையான அளவீடுகளை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத்துறை துறை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டுக்கொள்ளாமல் வடிகால் வசதி பணியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரூர் முதல் மொரப்பூர் வரை தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 வழி சாலை பணிகள் மேற்கொண்டு வருகிறார் பஸ்கள், கனரக வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முறையான மாற்று பாதை இல்லாததால் பழைய சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வேகமாக சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அது மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பஸ் உள்பட கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது ரோட்டில் இருக்கும் மண் மற்றும் தூசுகள் பரவி புகை மண்டலமாக மாறி இருசக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

    வாகனங்களால் ஏற்படும் தூசுகள் காரணமாக பகலிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை போட்டுக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    தரமான சாலை அமைக்கிறார்களா? என்று சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், விரைந்து இந்த 4 வழிச்சாலை பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • போலீசார் நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்தி மைதானம்-ராம்சந்த் ரோட்டில் இடது புறம் லாரிகள் நிறுத்தும் இடமாகவும், வலது பக்கம் நடைமேடையும் உள்ளது. இது மிகவும் குறுகலான சாலை. எனவே வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    காந்தி மைதானம்-ராம்சந்த் சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் நடை மேடையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் அங்கு பொதுமக்கள் நடக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
    • போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி, சோமனூர் நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.

    எனவே கிருஷ்ணாபுரம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

    ஆனால் அவை கடந்த பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
    • பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.

    குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.

    தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீர் வடிகால் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
    • கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை அருகே இருந்து தனியார் பள்ளி வழியாக திருப்பதி நகருக்கு தார் ரோடு செல்கிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் வகையில் திருப்பதி நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாலம் வரை சாக்கடை கட்டுவது, பின்னர் அந்த இடத்தில்சோ க்பீட் அமைத்து கழிவு நீரை பூமிக்குள் வடிய வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு தார் ரோட்டின் வடபுறமாக குழி தோண்டப்பட்டு சாக்கடை கட்டுமானப்பணி தொடங்கியது. இதில் திருப்பதி நகரில் இருந்து சோக்பீட் அமைய உள்ள இடத்திற்கு 200 அடி முன்பு வரை சாக்கடை கட்டப்பட்டுள்ளது. அதற்கடுத்து கட்டுமானப்பணி நடைபெறாததால் கடந்த 10 மாதங்களாக சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி அப்படியே உள்ளது. அதன்காரணமாக திருப்பதி நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிய வழியின்றி இந்த குழியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாவதால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்இ வ்வழியாக தினமும் காலையும் மாலையும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் டூ வீலர்களிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த ஒருவழிப்பாதையில் சற்று கவனக்குறைவு ஏற்பட்டால் சாக்கடைக்காக தோண்டப்பட்ட இந்த குழியால் விபத்து ஏற்படவும் வாய்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் கழிவு நீர் தேங்காத வகையிலும், விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையிலும் சாக்கடை கட்டுமானப்பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    • நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியின் தெற்கு பக்கமுள்ள சுற்று சுவர் விரிசலடைந்து உள்ளதால் தற்காலிகமாக குத்துக்கல்லை சுவற்றை தாங்கி பிடிக்க நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி கள் உயிர் அச்சத்தில் படித்து வருகின்ற சூழல் நிலவி வருகின்றது. மேலும் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை கழிவுநீர் வாய்கால் கட்டாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதால் தெருவில் நடுவே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவ தோடு பள்ளி வகுப்பறை சுவர்களின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி உள்ளது.

    மேலும் இதன் அருகில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் உள்ள நிலையில் சேதமான சுற்று சுவரை இடித்து அப்புறப் படுத்தி மாணவர்களின் அச்சத்தை போக்க முன் வருவார்களா? என்றும் மேலும் கோவில் தெருவில் கழிவுநீர் வாயிக்கால் கட்ட சம்பத்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இதன் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலை ஒட்டியே அமைந்துள்ளதால், அடிக்கடி இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் கோவில் சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பெத்தாம்பாளையம் செல்லும் சாலை உள்ளதால் அந்த வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் சுற்றுச்சுவரை சற்று தள்ளி அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விபத்துக்கள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

    எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.
    • சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்.

    சென்னையில் சாலையோர பகுதிகளில் தொங்கும் கேபிள் ஒயர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. சென்னையில் இணைய தளம், கேபிள்டி.வி உள்ளிட்ட சேவைகளுக்காக சாலையோரங்களில் கேபிள்கள் அமைக்கப்பட்டு வீடுகள், அலுவலகங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.

    சென்னை மாநகர தெருக்களில் பல இடங்களில் தெருவிளக்கு கம்பங்களை ஆக்கிரமித்து கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரம்பூர், உள்ளிட்டபகுதிகளில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் இந்த ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. பல இடங்களில் கம்பங்களை நட்டு கேபிள் ஒயர்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர்.

    சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். தற்போது வேப்பேரி, பசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலை உள்ளது இதனை சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது.
    • மக்கள் குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நெல்லிக்குப்பத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-வது வார்டில் கந்தசாமி தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து குடிநீரை பிடித்த போது கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சத்யா மற்றும் பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக கூறி புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகார் அளித்த சிறிது நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் 5 இடங்களில் பள்ளங்கள் தோண்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்யும் பணியினை ஆய்வு செய்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் சரி செய்து சில நாட்களான நிலையில் மீண்டும் விஜயலட்சுமி நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து குடிநீர் வந்தால் எப்படி மக்கள் குடிப்பது? இதனை குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரியிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொது மக்கள் தெரி வித்துள்ளனர்.

    ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் புதிய அதிகாரிகள் நிய மிக்கப்படாததால் இது போன்ற அத்தியாவசிய பணி களை யார் மேற்கொள்வது? என தெரி யாமல் நகரா ட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் போதுமான பணியாளர்களும் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்து வருகின்றது. இது போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய குடிநீர் சரி செய்யாமல் தொடர்ந்து வருவதால் மிகப் பரிய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா? 

    • மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது.
    • குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் மண்மலை கிராமத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பூட்டு போடப்பட்டு கேப்பாரற்று கிடக்கிறது.

    மேலும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு எதிரே மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அடிக்கடி பள்ளி மாணவர்கள் வந்து விளையாடி செல்வதும், சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத் தால் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×