search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாய"

    • புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.
    • இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வங்கியின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு யாரும் நுழையவில்லை. இதனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அபாய மணி ஒலித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களும் நிம்மதி அடைந்தனர். 

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாலை முதல் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் குமாரபாளை யம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே ஏறிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆற்றங்கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூருகையில், காவிரியில் அதிக நீர் வந்து கொண்டி ருப்பதால் கலெக்டரின் உத்தரவின் பேரில், கரை யோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம். மேலும் தங்குவதற்கு தேவை யான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.

    மேலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

    மேலும், பாதிக்கப்படக்–கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
    • இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரியில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேலாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

    இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூலாம்பட்டி பகுதியில் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை ஒடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் காவிரியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில், கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றினை கடக்கவோ, மீன் பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், காவிரி வடிகால் பகுதியில் உள்ள மணல் தீட்டுகளில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், விளைபொருட்களை உலர்த்தவும் கூடாது எனவும், கரையோர நீர் பிடிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    • குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    அதனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம்.

    மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    ×