search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிதா ராதாகிருஷ் ணன் எம்எல்ஏ"

    திமுக தலைவர் முக ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை தருகிறார். ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார். #mkstalin

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.

    அதே போல் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்துக்குடி ஒன்றியம், கூட்டுடன்காடு ஊராட்சியில் வருகிற 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார்.

    அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலை, புதுக்கோட்டை அருகில் உள்ல மங்களகிரி விலக்கில் நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மிக அவசியம் பங்கேற்க வேண்டும்.

    முன்னதாக காலை 8 மணிக்கு தூத்துக்குடி வருகை தரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin

    ×