search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டரின்டிகி தரேதி"

    சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் சிம்பு தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்திற்கு இயைமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #STR #Simbu
    அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்' வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். அதேநேரத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக ஹிப்ஹாப் ஆதி, சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சுந்தர்.சியின் அரண்மனை 2, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களுக்கும் ஆதியே இசைமைத்திருந்தார். அதுமட்டுமின்றி ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு படத்தை சுந்தர்.சி தான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



    இந்த படம் தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. 

    இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா 2 ஆகிய படங்களிலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #AttarintikiDaredi

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு, அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் சிம்புவின் மாமியாராக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu
    சிம்பு தன்னை பற்றி தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்ற சபதம் எடுத்து, படங்களை தேர்வு செய்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் `மங்காத்தா' படத்தில் அஜித் நடித்தது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். நேற்று இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.

    இது பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் மாமியாராக நதியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தை சுந்தர்.சி இயக்குவதால், இந்த வேடத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.



    இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் சிம்பு நடிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `செக்கச்சிவந்த வானம்' செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது. #STR #Simbu #AttarintikiDaredi

    தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான `அட்டரின்டிகி தரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu #AttarintikiDaredi
    திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `அட்டரின்டிகி தரேதி'.

    இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் கைப்பற்றியிருக்கும் நிலையில், இந்த படத்தில் நாயகனாக நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் படத்தை இயக்குவது பற்றி சுந்தர்.சி உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு ஒப்பந்தமாகும் பட்சத்தில் அவருக்கு இது ஒரு மாஸான படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் செக்கச்சிவந்த வானம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #STR #Simbu #AttarintikiDaredi


    ×