search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிவீரர்"

    • வேலூர் காவல் பணி சேர்ப்பு பள்ளியில் 27ந்தேதி முதல் 29 வரை முகாம்.
    • இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்கள் சேர்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர் பணியில் பெண்களை சேர்ப்பதற்கான ஆள் தேர்வு முகாம் வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில் வரும் 27ந்தேதி தொடங்கி 29ந்தேதிவரை நடைபெற உள்ளது.

    இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் 1ந்தேதிககு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைமுறை முழுவதும் நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் தயார்நிலை ஆகிய தகுதியின் அடிப்படையே உங்களுடைய தேர்வினை உறுதி செய்யும்.

    விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×