என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகற்ற வலியுறுத்தல்"
- டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் வலியுறுத்தினார்.
- இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர்
ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும் வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
மற்றொரு மதுபானக்க டை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர் மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால் மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர். இந்த மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு வெளியே கொண்டு செல்லவேண்டும்.
ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஏர்வாடி ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நகராட்சி பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
- பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை வைத்தார். மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கட்சி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது, அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றுவது, அரசு மருத்துவக் கல்லூரியை உடனே துவங்க தமிழக அரசை வலியுறுத்துவது, சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுவது, நகராட்சியில் தினமும் குப்பைகளை அகற்ற கேட்டுக் கொள்வது, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகராட்சியை வலியுறுத்துவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திர பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் பிரியன் வரவேற்றார். பொறுப்பாளர் ஆசை தம்பி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்