search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths arrested"

    • போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர்.
    • இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம்-புதுச்சேரி 4 வழிச் சாலை யில் மது விலக்கு செக்போஸ்ட் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் கிளியனூர் போலீ சார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து தமிழ கத்திற்கு கடத்தி வரப்படும் மதுபானங்கள், அதை கடத்தி வர பயன்படுத்தப்படும் வாக னங்களை பறிமுதல் ெசய்வது இவர்களது தலை யாய பணியாகும். மேலும், போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த 24-ந் தேதி கிளியனூர் செக் போஸ்டில் திருஞானம், கார்த்தி ஆகிய 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்த படி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருஞானம் என்ற போலீசார் நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது போல நடித்து காவலர் திருஞானம் கையில் இருந்து இ-சலான் மெஷினை பிடிங்கிக் கொண்டு தப்பி ஒடிவிட்டனர். சம்பவமறிந்து விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட சுப்பிரண்டு ஸ்ரீநாதா விசாரணை நடத்தினார்.

    மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடிக்கவும், இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையி லான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் உள்ள சீர்பாத நல்லூர் ஏழுமலை மகன் சதீஷ் (வயது 22), திரு வண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி ரங்கநாதன் மகன் சந்தோஷ் (20) ஆகி யோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடம் விசாரணை நடத்தி னர். அதில் 2 பேரும் புதுச்சேரியை சுற்றிப் பார்த்து விட்டு, மது அருந்தி வீடு திரும்பியதாகவும், போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் பைன் போடு வார்கள் என்ற பயத்தில் இ.சலான் மெஷினை பிடிங்கி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த மெஷி னை கொந்தாமூர் மேம்பா லத்தின் அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் கூறி னர். அங்கு சென்ற போலீ சார் இ-சலான் மெஷினை கைப்பற்றினர். வானூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    • வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வள்ளியூர்

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமை யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கலுங்கடி பகுதியை சேர்ந்த லென்ஸ் குமார் (வயது 23), ஏர்வாடி சீனிவாசபுரம் அய்யா பிச்சை (21) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? அதனை எங்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் இன்று பார்த்தனர்.

    இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரை நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதை பார்த்ததாக சிலர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்று விசாரிக்கப்பட்டது.

    அப்போது அவர்கள் வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் பசுபதி (வயது19), நடுவளவு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபரை கொன்றது தாங்கள் தான் என்றும், அந்த நபர் நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் (35) எனவும் கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பசுபதி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரும் கடந்த 13-ந் தேதி காலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது வண்ணாம்பாறைபட்டி பிள்ளையார் கோவில் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார்.

    குடிபோதையில் இருந்த பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்து நிர்வாணப்படுத்தி தங்களின் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு தப்பி ஓடி முயன்றுள்ளார். இதையடுத்து பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை பீர்பாட்டிலால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்பு ராஜ்குமாரின் உடலை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு பசுபதி மற்றும் பெருமாள் அங்கிருந்து சென்று விட்டனர். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தெரியவில்லை.

    அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் கிடந்தது இன்று காலையில் தான் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

    நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பிச்சைக்காரர் என்று கூட பார்க்காமல் கொலையாளிகள் இருவரும் குடிபோதையில் ஓரின சேர்க்கைக்கு முயன்று, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொலை செய்துள்ளனர்.

    ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது

    நெல்லை:

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளுக்கு உதவியாக வரும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு ஓய்வெடுப்பார்கள்.

    திருட்டு

    அவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி செல்வதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குமரி மாவட்டம் எடலாக்குடியை சேர்ந்த முகமது சம்சீர்(வயது 19), மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த மற்றொருவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை(47) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர்.

    • வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே விழுப்புரத்தில் இருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கு எல்லை க்குட்பட்ட கலஞ்சிகுப்பம் பகுதியில் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவில் பேரில் டி.ஏஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது களஞ்சிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புகழ் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் ஆகிய இருவரும் புதுவையில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடமிருந்து 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.
    • யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

    இங்குள்ள கழிவறை அருகே நின்றபடி பெண்கள் குளிப்பதை 2 வாலிபர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர்.

    பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரித்த போது வாலிபர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் வீடியோக்களை அழித்தான். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர்கள் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீராம் (வயது 29). அவரது நண்பரான வெங்கடேசன் (32) என்பது தெரிந்தது.

    அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வீடியோக்கள், புகைப்படம் எதுவும் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து 'ரெக்கவரி சாப்ட்வேர்' மூலம் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்கள், படங்களை திரும்ப எடுத்தனர்.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் குளியல் வீடியோக்கள், ஆபாச படங்கள் இருந்தன. கைதான இருவரும் சாலையோரம் குளியல் அறை உள்ள வீடுகளை நோட்டமிட்டு அதில் தங்களது செல்போன்களை மறைத்து வைத்து பெண்களின் குளியல் காட்சிகளை பதிவு செய்து வந்து உள்ளனர். பலருக்கு அனுப்பினர்.

    அந்த ஆபாச வீடியோக்களை அவர்கள் பார்த்து ரசித்து வந்த உள்ளனர்.

    மேலும் பலருக்கு பெண்கள் குளியல் காட்சிகளை அனுப்பி உள்ளதும் தெரியவந்து உள்ளது.

    பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.

    யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்களை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கைதான இருவரும் வேளச்சேரி பகுதியில் காலை நேரங்களில் பல வீடுகளை நோட்டமிட்டு தங்களது செல்போனை கழிவறை பின் ஜன்னல்களில் மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்து உள்ளனர்.

    ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து செல்போன் வைத்து விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து எடுத்து சென்று உள்ளனர்.

    இதனை யாரும் கவனிக்காததால் அவர்களது ஆபாச வீடியோ பதிவு நீடித்தது உள்ளது.

    அவர்கள் கடந்த 6 மாதத்துக்கு மேலாக இவ்வாறு குளியல் காட்சிகளை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தாங்கள் பார்த்து ரசிப்பதற்கும், நண்பர்களுக்கு அனுப்பவும் பதிவு செய்து இருக்கிறார்கள். இணையதளத்தில் பெண்கள் குறியல் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

    பெண்கள் சிலரை ஆபாச வீடியோ பதிவை காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.

    ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    நேற்று முன்தினம் மதுரை செல்லூர் மற்றும் மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரமேஷ், ஏட்டுகள் சின்னையா, கணேசன் மற்றும் போலீசார் மேல நாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களின் மொபட்டில் வெள்ளை நிற சாக்கு பைகள் வைத்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜோகராம் (வயது35), ஹரீஷ் (26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் மதுரை லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்று வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 400 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார்.
    • இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது38), டி.வி. மெக்கானிக். இவர் கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி வீட்டில் தங்கி இருந்தார்.

    அந்த வீட்டின் முன்பகுதியில் ஒரு புளியமரம் உள்ளது. அந்த மரத்தில் வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று மதியம் வழக்கம்போல் அந்த வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிக்க வந்துள்ளனர்.

    அப்போது அங்கிருந்த ராமமூர்த்தி, இங்கெல்லாம் கொக்கு பிடிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் அந்த வாலிபர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார். இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியது. தொடர்ந்து அந்த வாலிபர்கள், ராமமூர்தியை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்து முத்துசெல்வி அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராமமூர்த்தி கொலை குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கொக்கு பிடிப்பதெற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால் ராமமூர்த்தியை அடித்து கொன்றதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அலங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண்.

    இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (38). சண்முகசுந்தரம் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

    அதற்கு அந்த இளம்பெண் விருப்பமிருந்தால் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சண்முகசுந்தரம் தான் திருமணம் செய்து கொண்டால் அந்த இளம்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என கூறி வந்துள்ளார்.

    நேற்று அந்த இளம்பெண் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகசுந்தரம் தனது காரில் வழிமறித்து தனக்கு ஒரு முடிவு சொல்லுமாறு மிரட்டி உள்ளார். அதற்கு அந்த இளம்பெண் பேச மறுத்து அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரம் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரிடம் இருந்து தப்பி அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.

    அவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயகுமார் உதவியதும், இவர்கள் 2 பேரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகரில் போதை மாத்திரை விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள், 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் அனுப்பானடி தெய்வகன்னி தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சாம் நிகேதன் (வயது 20), அண்ணா நகர் அன்னை தெரு சங்கரநாராயணன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), தென்காசி மாவட்டம் புளியரை நாயுடு தெரு, சுப்புராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 23) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் புன்னாலகட்டே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் அருகே கரிஞ்சா மலையில் அமைந்துள்ள சரிஞ்சேஸ்வரா கோயில் வளாகத்தில் கடந்த மாதம் வாலிபர்கள் நான்கு பேர் காலணிகள் அணிந்தபடி நுழைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அதனை வீடியோ எடுத்து கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி அன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மத உணர்வுள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்பினரும் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தினர். இதேபோல், பண்ட்வாலின் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் நாய்க் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கைது

    இதைதொடர்ந்து, மங்களூரு நகரத்தை சேர்ந்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் பகவான் சோனாவானே கூறியதாவது:-

    புனித வழிபாட்டுத் தலத்துக்குள் காலணிகளை அணிந்து சென்ற புகாரில், புஷர் ரெஹ்மான் (20), இஸ்மாயில் அர்ஹமாஸ் (22), முகமது தானிஷ் (19), முகமது ரஷாத் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    வழிபாட்டு தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது அசுத்தம் செய்தல், ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாலிபர்கள் மீது புன்னாலகட்டே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஆயந்தூரை சேர்ந்தவர் குமார் மகன் வினோத்(வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 15–ந் தேதி காலை சவாரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆ.கூடலூரை சேர்ந்த அருள்ஜோதி மனைவி வனிதாவிற்கும், வினோத்திற்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இந்த விவகாரம் தெரிந்ததும் அருள்ஜோதி, தனது நண்பர்கள் உதவியுடன் வினோத்தை அருளவாடி தென்பெண்ணையாற்றுக்கு அழைத்துச்சென்றதும், அங்கு அவருக்கு மதுவாங்கி கொடுத்து கொலை செய்து உடலை தென்பெண்ணையாற்றில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருள்ஜோதி மற்றும் அவரது நண்பரான ஆயந்தூரை சேர்ந்த சந்திரபாலன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அருள்ஜோதியின் தம்பி ஆனந்தஜோதி(26), அருள்ஜோதியின் நண்பர்களான திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(27), அருண்பாண்டியன்(25), திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையை சேர்ந்த குமரன்(21) ஆகிய 4 பேரை காணை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×