search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young lady"

    • வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானார்.
    • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலக்கால் டோக் நகரை சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மகள் மீனாட்சி(வயது19). இவர் பி.பி.சாவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் ராஜாஅமராவதி(19). பேஷன் டிசைனிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் ேதடிப்பார்த்தும் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்ைல.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த தூக்கியாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கட்டிடத்தொழி லாளி யான இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் சுபலேகா(18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த சுபலேகா, நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம் .
    • இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற 24-ந்தேதி திருச்சி யில் மாநாட்டை நடத்துகிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கழகத்தின் 51-வது ஆண்டுவிழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக இளை ஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எந்தவித பதவி ஆசையும் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை கட்டிக்காக்கின்ற விசுவாசி. கடைக்கோடி தொண்டனின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தால் தான் இயக்கத்தை வழிநடத்த முடியும். வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடக்கும் முப்பெரும் விழாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணி, அணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்.

    இந்த விழாவில் 5 லட்சம் இளைஞர்களை திரட்டு வோம். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாநாடு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னாள் எம் பி கோபாலகிருஷ்ணன், முருகேசன்,மாநில நிர்வாகி மருதுஅழகுராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், மாணவரணி மாநில துணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் சோலை குண சேகரன் ஆகியோர் வர வேற்றனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆட்டோ கருப்பையா, கண்ணன், கெம்பையா, பவுன்ராஜ், நாச்சியப்பன், கிரி, சாத்தன உடையார், பத்ரி முருகன், புல்லட் ராமூர்த்தி, இன்பம்,முத்து,பாரப்பத்தி ஊராட்சித்தலைவர் முத்தையா,மற்றும் மேலூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது மகள் ஹசீரா (வயது19). இவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.

    இவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி வந்தார். அப்போது சதீஷ், ஹசீராவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ஹசீராவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹசீரா நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்த னர். ஆனாலும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அக்பர் தனது மகள் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, யோகாநந்தசாமி தெற்கு மடம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(38), டிரைவர். இவரது மனைவி மணிமேகலை(26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 6 மாதமாக மணிமேகலை யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் இருந்து பையுடன் வெளியேறிய மணிமேகலை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    • ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறா
    • மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பல த்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காக சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மகேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார், வீட்டில் சென்று கேட்ட போது பக்கிம் அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணையாக இருந்த போது இஸ்லாமியராக மாற வேண்டும் என தெரிவித்தனர். மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி, அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டு கடந்த 01.01.2023 அன்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது  இதையடுத்து ஜனவரி 16-ந்தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பெற்றெ டுத்தார். இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானார். தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகார் மீது மகளிர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.
    • இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள அழகுசமுத்திரம் கிராமம் களர்பட்டியை சேர்ந்த லட்சுமி மகள் ஸ்வேதாமேரி (வயது 17). இவர் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுபற்றி காப்பக இயக்குனர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளம்பெண் உடலில் தீ வைத்து கொண்டதால் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடந்தது. கணவன்-மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் வேலைநிமித்தமாக சென்னைக்கு சென்றார். இதனால் மீனா தனது தாய்வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் செல்வி, மீனாவை மீட்டு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிகிச்சையில் இருந்தபோது தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணமான நாள் முதல் அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த மனோகர்.
    • மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா என்பதும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான மனோகர் திருமணமான நாள் முதல் இரண்டு மாதங்களாக சவுந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சவுந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து 2மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 4 மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புளியங்குடியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அதே பகுதியை சேர்ந்த கற்பகசெல்வி(33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  கற்பக செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் கடன் வாங்கியதாகவும், அதனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை அடைப்பதற்கு மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

     இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஜோ சாண்ட்லர் என்ற 23 வயது இளம்பெண் கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.
    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.

    அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் முகம் திருப்பி கொள்வார். மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்டு எடுக்கும் உருளைக்கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார்.

    வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார். இதுபற்றி சாண்ட்லர் கூறும்போது, எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளைக்கிழங்கு வறுவலே. அதனையும், மிருது தன்மை வரும்வரை வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம் என கூறுகிறார்.

    பள்ளியில் படிக்கும்போது எனது உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல்களையே (ஒரு வகையான சாண்ட்விச்) எடுத்து செல்வேன் என கூறுகிறார். அது ஒன்றையே சாப்பிட நான் விரும்புவேன். சில சமயங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன்.

    மதிய உணவு, இரவு உணவாக மேற்கூறிய சாண்ட்விச்சுகளையே எடுத்து கொள்வேன். ஒரு சில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன் என கூறுகிறார். இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்க கூடிய தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பாதிப்புகளை கொண்டது.

    இதனால் பயந்து போன சாண்ட்லர் உடல்நலம் தேற மருத்துவர் டேவிட் கில்முர்ரி என்பவரை சந்தித்து உள்ளார். அவர் அளித்த சிகிச்சையின் பயனாக, முதன்முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கியிருக்கிறார். சீச்சீ... இந்த பழம் புளிக்கும் என கூறி வந்த அவர், ஸ்டிராபெர்ரி பழங்கள் எவ்வளவு சுவையாக உள்ளன என என்னால் நம்ப முடியவில்லை என கூறுகிறார்.

    இவருக்கு ஏற்பட்டுள்ள வியாதி நியோபோபியா என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோஸ், கடலைகள் மற்றும் பிற உணவுகளையும் எடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற உள்ள தனது திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிக்கலாம்...அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்
    ×