என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young girl suicide"
கோவை:
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவரது மனைவி சபானா பர்வீன் (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சபானா பர்வீனின் தந்தை விபத்தில் சிக்கினார். இதில் அவரது விரல்கள் சேதமடைந்தது. இதனால் சபானா பர்வீன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சபானா பர்வீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அடுத்த கொளத்துப்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் பூபதி வெளியே சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபதி வீட்டு வந்து கதவை திறந்தார். அப்போது அவரது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பம்பட்டு:
வேப்பம்பட்டு ஆர்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். வெல்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் பிறந்த 7 நாட்களில் குழந்தை இறந்து விட்டது. இதனால் ரேவதி குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேவதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போரூர்:
எம்.ஜி.ஆர் நகர் கங்கை கொண்ட சோழன் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன் குடிப்பதற்காக வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் கோரிக்குளம் புதுதெருவை சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 22). இவர்களுக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த பாண்டியம்மாள், விஷம்குடித்து வாயில் நுரை தள்ளியப்படி இறந்து கிடந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பாண்டியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாண்டியம்மாள், வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பாண்டியம்மாளுக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார். புதுவையில் தங்கி டெய்லர் வேலை செய்து வந்த போது அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜெயசுதா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இதற்கிடையே வில்லியனூர் மெயின்ரோட்டில் ஒரு வாடகை வீட்டின் கீழ் தளத்தில் டெய்லர் கடையும், வீட்டின் மாடியில் மனைவி, குழந்தைகளுடன் ராஜேஷ் வசித்து வந்தார். டெய்லரிங் தொழிலை மேம்படுத்தவும், வீட்டு செலவுக்கும் ராஜேஷ் பலரிடம் பணம் கடன் வாங்கினார். சுமார் 3 லட்சம் வரை கடன்வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த கடனை திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் திண்டாடி வந்தார். அதேவேளையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தனர். இந்த கவலையை மறக்க ராஜேஷ் மதுகுடிக்க தொடங்கினார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கடன் கொடுத்தவர்கள் ராஜேஷ் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர். அப்போது ராஜேஷிடம் அவரது மனைவி ஜெயசுதா தினமும் விட்டின் படிஏறி கடன் கொடுத்தவர்கள் திட்டிவிட்டு செல்வது அவமானமாக உள்ளதே என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ராஜேஷ் மதுகுடிக்க சென்று விட்டார். அன்று இரவு வீட்டுக்கு வராமல் ராஜேஷ் மதுக்கடை அருகிலேயே தூங்கி விட்டார்.
மறுநாள் ராஜேஷ் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்ததால், மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி அவரை தேடவில்லை.
இந்த நிலையில் நேற்று சந்தேகம் அடைந்து ராஜேஷ் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் ஜெயசுதா துப்பட்டாவால் தூக்குபோட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயசுதா தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெயசுதாவின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு திவாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை முக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 20). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது திருமணமான 4 மாதத்துக்கு பிறகு வெளிநாடு சென்ற சுரேஷ் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திகாவின் தந்தை வடிவேலு ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
போலீசார் கார்த்திகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த சு.வாழாவெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீ இவரது மனைவி தீபா (வயது 27). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ராஜீவிற்கு மது குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தீபாவிடம் சண்டை போட்டுள்ளார். சம்பவத்தன்றும் ராஜீ மது குடித்துவிட்டு தீபாவிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த தீபா வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிகொண்டு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீபா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே எலத்தூரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கவுசல்யா (வயது 24). நம்பியூர் பெரியார் நகரில் இவர்கள் வசித்து வருகிறார்கள். கவுசல்யா நம்பியூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கவுசல்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது கவுசல்யா தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கவுசல்யாவின் தாயார் சகுந்தலா வீட்டு கதவு பூட்டி கிடப்பதை கண்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அங்கு மகள் தூக்கில் தொங்கியதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கவுசல்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்வதற்கு முன் கவுசல்யா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதி உள்ளார்.
பேரையூர்:
சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி வினோதினி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஹரி (1½) என்ற மகன் உள்ளான்.
எம்.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமர்நாத் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வினோதினி விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சேடப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. வினோதினிக்கு திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்