search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga"

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
    • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

    மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

    நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

    • பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது.
    • தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது.

    பிரசவ தழும்புகள் மறைய பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது எல்லா பெண்களுக்கும் அது ஏற்படும். கர்ப்ப காலத்தில் குழந்தை உள்ளே வளர்வதற்காக உடல் வேகமாக வளர்ந்து விரிவடையும். அதே சமையம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த இறுக்க தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ அல்லது வயிற்றில் தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.

    இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம்.

    பிரசவத்திற்கு பின் வயிற்றில் தழும்பு மறைய கொஞ்சம் ஆயிலை எடுத்து மெதுவாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தடவுங்கள். அதாவது உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெயை எடுத்து வயிற்றில் ஒரு பகுதியில் இரண்டு நிமிஷம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு இதே மாதிரி அடுத்த பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செல்கள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். தழும்புகள் சீக்கிரமாக மறைய ஆரம்பிக்கும்.

    யோகா

    பிரசவ தழும்புகள் மறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. அதாவது வாக்கிங், யோகா போன்ற லேசான பயிற்சிகள் கூட இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும். தசைகள் வலுவானால் தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும்.

    முட்டை:

    பிரசவ தழும்புகள் மறைய முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீஷியம் போன்ற நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பிரசவ தளும்புகளை போக்க உதவியா இருக்கின்றன.

    ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தனியாக அடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின்பு இளஞ்சூடான தண்ணீரை கொண்டு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் உள்ள இடத்தில் நன்கு துடைத்து விட்டு. அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள்.

    அதன்பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வரை அப்படியே வைத்திருக்கவும். பின்னர் இளஞ்சூடான தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரன்டு அல்லது மூன்று முறை செய்து வர பிரசவத் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

    கற்றாழை:

    பிரசவ தழும்புகள் மறைய கற்றாழை ஜெல்லை எடுத்து தேரடியாக தழும்புகள் இருக்கும் பகுதியில் தடவினால் நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும். கற்றாழை சருமத்தை மென்மைப்படுத்தும்.

    தேன்:

    பிரசவத் தழும்புகள் மறைய சுத்தமான மலை தேனை எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். தேன் நன்கு காய்ந்தவுடன் இளஞ்சூடான தண்ணீரில் கழுவினால் சீக்கிரமாக பிரசவ தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

    • தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர்.
    • பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர். அங்குள்ள சிவப்பு மணற்கல் மேடையில் நான்கு பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்ய அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதையடுத்து அந்த பெண்களிடம், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்களை எச்சரித்து, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை அதிகாரிகள் பெற்றனர்.

    • அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும்.
    • தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும். யோகா என்பது நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு கலை ஆகும். நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை அமைதியாக வைத்திருக்க செய்ய கூடிய பயிற்சியாகும். அதுமட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்கவும் யோகா உதவுகிறது. எனவே ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் அவர் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெரும்பாலான மக்கள் யோகாசனத்தை தேர்வுசெய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் உங்கள் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் தினமும் யோகா செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

    உங்கள் உடலில் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள யோகாசனம் மிகவும் உதவுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    உங்கள் மனதில் உள்ள ஏராளமான பதட்டத்தை குறைப்பதற்கு யோகா மிகவும் உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே தினமும் யோகா செய்வதன் மூலம் மனதில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கலாம்.

    தினமும் யோகா செய்வதன் மூலம் இதயத்திற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் செல்கிறது. மேலும் இதயத்தில் உள்ள திசுக்களின்

    ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. எனவே இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்தால் அவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

    இரவில் தூக்கம் வராதவர்கள் அல்லது இரவில் திடீரென்று விழிப்பவர்களுக்கு யோகா ஒரு சிறந்த தீர்வாகும். எனவெ தூக்கம் வராதவர்கள் தினமும் ஒரு 30 நிமிடம் யோகா பயிற்சி செய்தால் போதும் தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்கலாம். மேலும் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் மயக்கம் வராமல் தடுக்கலாம்.

    • தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர்.
    • யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார்.

    இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கி யோகா பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்வத்வா, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதே வீட்டில் யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர். கிருஷ்ண சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்து விட்டு, கிருஷ்ணசந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யோகா ஆசிரியரான கிருஷ்ணசந்திரன், உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து வரும்போதே, ஸ்வத்வாவை கேரளாவுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனம்.
    • மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

    உங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம்.

    இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும். மேலும் இந்த யோகாசனத்தை செய்வதன் மூலம் கழுத்து மற்றும் முதுகு வலி குணமாகும்.

    சவாசனம்:

    இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

    தலை எந்தப்பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும். தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது, வலது உடல் பாகம் சமமாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.

    மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும். கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் 10-15 வினாடிகள் அப்படியே இருங்கள்.,

    இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் மன அழுத்தங்கள் குறைந்து உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைய தொடங்கி விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம்.

    • காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.
    • கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    * கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    * யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    * யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    * பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

    * தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    * காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

    * காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    • உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
    • உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம்.

    40 வயதை தாண்டிய பெண்களா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு முதலில் பெண்கள் 40 வயதை தாண்டியவுடன் உடல் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.

    40 வயதிற்கு மேல் உடலை அழகாக வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? என்று எல்லோரும் நம்மை பார்த்து கேட்கும் அளவுக்கு ஆச்சரியமாக வைத்துக்கொண்டால் அதுவே நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

    நமக்கு பணம், நகை இருக்கும்போது வரும் பெருமையை விட இவ்வளவு வயது ஆகியும் எப்படி இருக்கிறாங்க. உடலை எப்படி மெயிண்டெய்ன் பண்றாங்க என்று நம்மை பார்த்து சிலர் கூறுவதும் நமக்கு ஒரு பெருமைதான். அதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஜிம்மிற்கு செல்வதெற்கெல்லாம் வசதி இல்லை, அல்லது நேரம் இல்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே நான் செய்யும் வேலைகள் கூட நமக்கு ஒரு வகையான உடற்பயிற்சியே. அதாவது கூட்டுவது, துடைப்பது, உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளை செய்வது, முடிந்தவரைக்கும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியம்.

    அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம். உடலுக்கு யோகா வலிமையையும் மனதுக்கு அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும். அடுத்து கணவன், மனைவி உறவுக்குள்ளும் ஒருவகையான சலிப்பு மற்றும் விரிசல் ஏற்படுகின்றது. ஏன் இந்த விரிசல் என்றால் குழந்தையை வளர்க்கிறோம் என்ற பெயரில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையோ, விருப்பத்தை சொல்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கடமைக்காக வாழ்வதாக இன்றும் நிறையபேர் சொல்வதுண்டு. 40 வயதாகிவிட்டது இனிமேல் என்ன? என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 40 வயதிற்கு பிறகும் சந்தோசமான வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணவேண்டும்.

    உணவுமுறைகளிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைபேறுக்கு பிறகு நிறைய பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

    இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. அதற்கு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடிய பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நமது உடம்பை இயற்கையான உணவை உட்கொண்டு நல்ல திடகாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவின் மீது அதிக அக்கறை செலுத்தி நல்ல சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது. எடையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக நாம் அடிக்கடி கல்யாண போட்டோவை எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் கல்யானத்தின் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்திருப்பார்கள். இது தான் அவர் உடல் எடையை குறைக்க நல்ல டிப்ஸ்.

    கல்யாணத்திற்கு பிறகு எல்லோருக்கும் எடை அதிகரிக்க காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்வலி, முதுகுவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எடைமீது மட்டும் இல்லீங்க, உடை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    40 வயதிற்கு மேல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளனர். அது ரொம்ப தவறு. எப்போதுமே ஒரு பெண் எவ்வளவு வயதாக இருந்தாலும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் வயதுக்கு ஏற்ற உடை, அலங்காரம், ஆபரணங்கள் அணிவது என்று தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மெனோபாஸ் பிரச்சினை பெண்களை இன்னும் பலவீனமாக்கிவிடுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடமும், கணவனிடம் புரியவைக்க வேண்டும். இதனாலேயே பல பெண்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிழுங்கள். தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை விடுத்து குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். குழந்தைகளுடன் நாம் செலவு செய்ய செய்ய நாம் நம்முடைய வயதை மறந்து குழந்தைகளுடன் சேர்ந்து இன்னும் நாம் இளமையாக இருப்போம். நாம் நம்முடைய வயதை மறந்து சந்தோசமாக இருக்கமுடியும்.

    • வீக்கம் மற்றும் உப்புசம் காரணமாக உங்கள் வயிறு பெரிதாக தோன்றும்.
    • ஆசனங்கள் உப்புசம் தொடர்பான அசவுகரியத்தை நிவர்த்தி செய்கிறது.

    வீக்கம் மற்றும் உப்புசம் காரணமாக உங்கள் வயிறு பெரிதாக தோன்றும். முழுமை இறுக்கம் போன்ற சங்கடமான உணர்வின் விளைவாக உங்கள் ஆடைகள் இறுக்கமாக உணரலாம். உணவு பழக்கவழக்கங்கள். உணவுக்கான அசாதாரண எதிர்வினைகள் அல்லது குறிப்பிட்ட மருத்துவ பிரச்சனைகளால் உப்புசம் ஏற்படலாம்.

    சில உணவுகள் மற்றும் பானங்கள் அத்துடன் செரிமான அமைப்பில் வாயுக்கள் குவிவதற்கு வழிவகுக்கும் உணவு முறைகள் உப்புசத்துடன் தொடர்புடையவை. யோகா ஆசனங்கள் உப்புசம் தொடர்பான அசவுகரியத்தை நிவர்த்தி செய்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. யோசாசன முறைகள் விக்கம் மற்றும் வயிறு உப்புசத்தை குறைப்பதோடு பிரச்னைகளையும் சரிசெய்வதாக கூறப்படுகிறது.

    அபானாசனம்

    வீக்கம், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையில் இருந்து விடுபட எளிதான ஆசனம் அபானாசனம். தரையில் விரிப்பினை விரித்து அதில் முதுகு தரையில்படும்படி படுக்கவும் கால்களை மடித்து, பாதங்களை மேலே உயர்த்தி இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும் முட்டிகளுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும். பாதங்கள் தளர்வாக இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் மூச்சை இழுத்து. ஓரிரு விநாடிகளுக்குப்பின் மூச்சை வெளியே விட்டபடி இரு முட்டிகளையும் மார்பு பக்கம் நகர்த்துங்கள். இப்போது கால்கள் நன்கு அகண்டு, முழங்கைகள் தரையைத் தொடும். ஓரிரு விநாடிகளுக்குப்பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரவும் இதுபோல் ஆறு முறை செய்யவும்.

    சேதுபந்த சார்வாங்காசனம்

    இந்த ஆசனம் செய்வதன் மூலம் தலைகீழ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வீக்கம் மற்றும் வயிறு உப்புசம் பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது. முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள் பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும் உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வைத்து கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும் இப்போது இடுப்பை மேலே உயர்த்தி மெல்ல முதுகையும் உயர்த்துங்கள்.

    இடுப்பை கைகளால் தாங்கும்படி பிடித்துக் கொள்ளுங்கள் இப்போது தலை கழுத்து தோள் பட்டை வரைக்குமே தரையில் இருக்க வேண்டும் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள் மூச்சை விடும்போது மீண்டும் தரையில் உடலை கிடத்துங்கள். இப்போது ரிலாக்ஸ் ஆகுங்கள் இது போல் ஐந்து முறை செய்யலாம்.

    ஆனந்தபாலாசனம்

    இந்த ஆசனத்தை செய்வது கொஞ்சம் குழந்தைத்தனமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ உணரலாம். ஆனால் பழமையான வயிற்று உப்புசம் பிரச்சினைகளை கூட விடுவிக்கும். தரை விரிப்பில் உங்கள் தலையை வைத்து, உங்கள் முழங்கால்களை 90  டிகிரி கோணத்தில் உங்கள் மார்பை நோக்கி வளைக்கவும் உங்கள் கால்களின் அடிப்பகுதியை கூரையை நோக்கி வைக்கவும். உங்கள் முதுகெலும்பை நடுநிலையாக வைத்திருங்கள்.

    முன்னோக்கிச் சென்று, உங்கள் கால்களின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தைப் பிடிக்கவும், முழங்கால்களை பிரிக்கவும் அவற்றை அக்குள் நோக்கி நகர்த்தவும், உங்கள் குதிகால்களை உங்கள் கையில் வளைத்து பக்கத்தில் இருந்து பக்கமாக மெதுவாக அசைக்கவும். உங்கள் மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும் மற்றும் வெளியேற்றவும் இந்த ஆசனத்தில் 5 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும். முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    உத்தானாசனம்

    உத்தானாசனம் அல்லது முன்னோக்கி மடிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. சிறுவயதில் இருந்தே நம் வழக்கத்தில் உள்ளது இந்த ஆசனம். குறிப்பாக ஷூ லேஸ்களை கட்டும்போதோ, தரையில் இருந்து எதையாவது எடுக்கும்போதோ அல்லது சாக்ஸ் அணியும்போதோ இந்த ஆசனத்தின் வெவ்வேறு பதிப்புகளை நாங்கள் தினமும் செய்கிறோம். கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும்.

    இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள் கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.

    பச்சிமோத்தாசனம்

    * இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் கால்களை நீட்டி நேராக உட்காரவும்.

    * முதுகுத்தண்டை நேராக்கி, நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை மேலே உயர்த்தவும்.

    * பின் மூச்சை வெளியிடும்போது இடுப்பை முன்னோக்கி வளைத்து, மேல் உடலை கீழ் உடலின் மீது வைக்கவும்.

    * உங்கள் கைகளால் கால்விரல்களை பிடிக்கவும் மற்றும் மூக்கால் முழங்கால்களைத் தொட முயற்சிக்கவும்.

    * இந்த தோரணையில் 10 வினாடிகள் வரை இருக்கவும்.

    • யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும்.
    • இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும்.

    உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது.

    தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலம் பெறும். மேலும் நன்றாக சுவாசிக்க முடியும். இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

    உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைச்சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து அழகான ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா உதவிசெய்கிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நாம் பதட்டம் இல்லாமல் மனஅமைதி அடையவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் பெற யோகாசனம் உதவுகிறது.

    அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப்பிரச்சினை மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை இழந்து சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகாசனம் செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்குகிறது.

    யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு நோய் நொடியின்றி நீண்ட நாட்கள்வாழவும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதாலும் தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதாலும் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்பதே எல்லோரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைமுறை இல்லாமல் உடல் எடை கூடி அவதிப்படுகின்றனர். பலருக்கும் வயிற்றில் தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபமாக தொப்பையை குறைக்க முடியும்.

    ×