search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga Day"

    • சிவகங்கையில் யோகா தின பேரணி நடந்தது.
    • பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோகாதின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்முகராஜா கலையரங்கம் முன்பாக தொடங்கி பேருந்து நிலைய பகுதிகள் வரை நடைபெற்ற பேரணியில் பள்ளியின் நன்மாணாக்கர் சான்று பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆரோக்கியதேவி, சிவகலா, பௌமியா, சர்மிளா மற்றும் நகர்ப்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதிலிங்க போஸ் தலை மையில் ஜெயபாலன், ராஜ்குமார், முத்தையா, ஆனந்தகுமார் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு வழங்கி பேரணியினை சிறப்பாக நடத்தினர்.

    பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தியாகராசன், அனிதா, சுரேஷ்கண்ணன், அகிலாண்டேசுவரி, பாண்டியராஜன், சந்திரலேகா, முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    • துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி பாரத் பள்ளியில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழும சிறப்பு அதிகாரி அரவிந்த் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூர்வஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ரக்சனா வரவேற்றார். மனிதநேயம் குறித்து தனீஸ் குழுவினர் யோகா மூலம் விளக்கினர். நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    ஆசிரியை லாவண்யா, தேவி ஆகியோர் சமஸ்கிருத யோகா பாடலுக்கு ஆங்கிலத்தில் விளக்கமளித்தனர். அறிவியல் ஆசிரியை சுமதி, கணித ஆசிரியை முத்துக்குமாரி உள்ளிட்டோர் யோகாசனம் பற்றிப் பேசினர். பாரத் கல்விக் குழும அதிகாரி அரவிந்த் குமாா் சிறப்புரையாற்றினார்.

    ஆகிலா யோகா தின உறுமொழி எடுத்தார். ஆமினா நன்றி கூறினார்.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    • நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி

    நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டையில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி தலைவர் சி. குருசாமி தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் எம்.எஸ். ஜெயராமன் மாணவ- மாணவிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளித்தார். யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார்.இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தளிக்கோட்டை பா.ஜ.க கிளைத் தலைவர் பாரதிராஜா, கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் யோகாசனம் செய்தனர்
    • 350 ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் யோகாசனங்களை செய்து அசத்தினர். மேலும் அவர்கள் நடனமாடி யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயது பிரிவினரும் யோகா கற்றுக்கொள்ளலாம் என்றனர். ஊட்டி கோர்ட்டில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன், தமிழினியன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஏகலைவா அரங்கத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்தனர். ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டன.

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சிக்கு டீன் மனோகரி தலைமை தாங்கினார். கூடலூர் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று உடல் வலிமையை கூட்டும் வகையில் யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் பேசும்போது, யோகா செய்வதால் மனம், உடல் பலம் பெறுகிறது. நினைவுத் திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்து படிக்க முடியும் என்றார். இதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சர்வதேச யோகா தினத்தை கடைபிடித்தனர். இதையொட்டி அனைவரும் யோகா செய்தனர். அதற்கான பயிற்சியை மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கர் அளித்தார். தொடர்ந்து கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் கலந்துகொண்டார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் என்.சி.சி. யூனிட்டில் இருந்து சுபேதார் பிரகாஷ், ஹவில்தார் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய மாணவர் படையின் தரைப்படை அதிகாரி சிவமுருகன் வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் கணேசன், நெல்சன் துரை ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கே.ஏ.மேல்நிலைப்பள்ளி, எல்.கே.மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.டி.டி.ஏ. மேல்நிலை ப்பள்ளிகளை சேர்ந்த 185 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி லெப்டினன் கர்னல் சுனில் உத்தம் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் என்.சி.சி. யூனிட்டில் இருந்து சுபேதார் பிரகாஷ், ஹவில்தார் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரிகள் மணி, அரிச்சந்திரன், சேக் பீர்முகம்மது காமீல், சத்யன் மற்றும் ஐசக் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • நீண்ட நாள் உயிர் வாழலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் அழகேசன், வழக்குரைஞர்

    சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுநரும், இயற்கை மருத்துவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியளித்தார்.

    சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, யோகாவானது மனிதனின் உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான அறிவியல் அணுகுமுறையை உருவாக்குவதற்கான ஒருவகையான அடித்தளமாகும் என்றார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக கலோரிகள் உள்ள உணவை உட்கொண்டு உடலுழைப்பு இல்லாததால் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வு, உடல் பருமன், படபடப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    தினமும் யோகா பயிற்சி செய்வதால் இத்தகைய நோய்களிலுருந்து விடுதலை பெற்று, உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் வயது மூப்பை தடுத்து நீண்ட நாள் உயிர் வாழலாம் என்றார்.

    பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    • யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் மதன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியை சுப்புரத்தினா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 500 மாணவ மாணவிகள் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காட்டினர்.

    யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை அளித்தனர்.

    ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வம், மகேஸ்வரி உள்பட பலர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
    • பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப்துரை ராஜ் யோகாவின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

    பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் ஜேக்கப்துரை ராஜ் யோகாவின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

    • 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்தனர்.
    • ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் தலைமை தாங்கினார்.

    10-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

    மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இப்பயிற்சிகளை செய்தனர். சூர்ய நமஸ்காரம், விருட்சாசனம்ரூபவ், வஜ்ராசனமரூபவ், வீரபத்ராசனமரூபவ், உஸ்தாசனமரூபவ், யோகமுத்ரா போன்ற ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது.

    இறுதியில் யோகாசன பயிற்சியாளர் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

    • பாளை சேவியர் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.சி.சி. மாணவர்கள்.
    • சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று நெல்லையில் பல்வேறு பள்ளிகள், விளையாட்டு மைதானத்தில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று நெல்லையில் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், வன காப்பாளர் ஹேமலதா பங்கேற்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் யோகாசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 7 மணி வரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் நேரு யுவகேந்திரா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகாசான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த யோகாசனத்தில் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட யோகாசன சங்க செயலாளர் அழகேசராஜா வரவேற்றார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானசந்திரன் தொடக்க உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்க–ளாக மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட உதவி வன காப்பாளர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலை 6 மணிக்கே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்வமுடன் மைதானத்திற்கு வந்தனர். தன்னார்வல்கள் மற்றும் சில பள்ளிகளில் இருந்து மொத்தமாகவும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்டு பலவகையிலான யோகாசனத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர்கள் சிவசங்கர், அமல் தாமஸ் மற்றும் மிதார் முகைதீன், பாத்திமா, மரியசூசை உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் தேசிய இளைஞர் தன்னார்வலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளியில் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜோதி சிலம்பு பயிற்சி மையம் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
    • யோகா நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யோகாசனங்கள் செய்தார்

    புதுச்சேரி:

    யோகா தினத்தையொட்டி மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சிசர்வதேச யோகா தினத்தையொட்டி மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியிலுள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளியில் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஜோதி சிலம்பு பயிற்சி மையம் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த யோகா நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யோகாசனங்கள் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜோதி சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியர் ஜோதி, செந்தில், கண்ணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் யோகா ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி, தண்டபாணி, சக்தி, பாலன் ஆனந்தன் ரவி மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.
    • கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 நோயாளிகள் பங்கேற்றனர்.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் யோகாசன நிகழ்ச்சிக்கு தியாராஜ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் யோகா ஆசனங்கள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    யோகா பயிற்சி செய்யும் பழக்கம் குழந்தைகளிடம் ஏற்படுத்தப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனுடன் இணைந்திருப்பார்கள். குழந்தைக்கு யோகா கற்பிப்பதும், பள்ளிகளில் அதை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    டெல்லி அரசு நகரத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. என்றாலும், யோகா செய்வதை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    யோகா பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானோர் என்கிற நிலையில் இருந்து லட்சக்கணக்கானோர் என்கிற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் 8-ம் வகுப்பில் யோகாவை இலவசமாகக் கற்றுக்கொண்டேன். எனவே இது மக்களுக்கு இலவசமாக இருக்கும். காற்றைப் போன்று வாழ்வின் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இலவசம்.

    டெல்லி யோகா பள்ளியின் கீழ், இலவச வகுப்புகளின் ஒரு பகுதியாக ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என 17,000க்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் தினமும் 546 இடங்களில் யோகா பயற்சி செய்கின்றனர்.

    கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 பேர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×