search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga Day"

    • உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன், துணைத் தலைவர் அரவிந்த், மேனே ஜிங் டிரஸ்டி மோனிஷா ஆகியோர் தலைமையில் பள்ளி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் அனுசியா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

    மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். தினந்தோறும் காலை அல்லது மாலையில் யோகா செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பள்ளி முதல்வர் எடுத்து ரைத்தார். முடிவில் மாண வர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.

    • அன்னப்பராஜா பள்ளியில் யோகா தினவிழா நடந்தது.
    • உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜபாளையம் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளை கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவன் சுதர்சன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.

    • புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
    • ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.

    இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.

    • யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் மோடி தெரிவித்தார்.
    • விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    அவர்களோடு அமர்ந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் தெரிவித்தார்.

    'யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது. பதிப்புரிமை,காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர். யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி' எனவும் பிரதமர் மோடி பேசினார்.

    • தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது
    • தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

    பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது. யோகக்கலையின் மையப் புள்ளி தமிழ்நாடு தான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.

    திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் வரவில்லை. இதில் இருந்து அகில இந்திய அளவில் தி.மு.க.வுக்கு மரியாதை இல்லை என்பது தெரிகிறது. நிதிஷ்குமார் தமிழகம் வராமல் இருந்தது தி.மு.க.வின் எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக்கு கிடைத்த தோல்வி ஆகும்.

    செந்தில் பாலாஜி விஷயத்தில் தமிழக மனித உரிமை ஆணையம் தி.மு.க.வின் ஆணையமாக செயல்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியில் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் தரம் இல்லையா? இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
    • முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது.

    பவானி:

    இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஈரோடு மற்றும் பவானி சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவிற்கு சித்த பிரிவு டாக்டர்.கண்ணுசாமி தலைமை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன், மனவளக்கலை மன்ற ஆறுமுகம், உலக சமாதான ஆலய ஞானாசியர் ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியத்திலான திண்பண்டங்கள், முளைகட்டிய தானியங்கள், தொற்றா நோய்களுக்கான உணவுகள், உணவு உண்ணும் முறைகள், உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

    முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது. இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு நன்னாரி ஜூஸ், நெல்லிக்கனி ஜூஸ், பருத்திப்பால் உள்பட பல்வேறு வகையான ஜூஸ்கள் வழங்கப்பட்டது.

    • வந்தவாசி அரசு மருத்துவமனையில் பயிற்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் டாக்டர் முகமது அர்க்கம், உதவியாளர்கள் சுரேஷ்,கல்பனா, மற்றும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

    • புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் சர்வதேச யோகாதின கொண்டாட்டபட்டது
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா பாண்டியன் யோகா பயிற்சிகள் குறித்து விளக்கமளித்தார். அதைதொடர்ந்து கௌரவ விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துணைஇயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சர்வதேச மாநில, மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விஷாலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டர். முடிவில் யோகா புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார்.

    திருப்பூர்:

    அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் அணிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'டீ-ஷர்ட்' வழங்கப்படுகிறது.திருப்பூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தின டீ-ஷர்ட்டுகளை தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது.

    அவ்வகையில் நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் யோகா தின விழாவில் பங்கேற்போர், திருப்பூரில் தயாரான டீ-ஷர்ட்டுகளை அணிகின்றனர்.

    இது குறித்து ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

    அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நியூயார்க் கிளை 2016 முதல் சர்வதேச யோகா கொண்டாட்டத்துக்கான டீ-ஷர்ட் தயாரிப்பு ஆர்டர்களை எங்களுக்கு வழங்கி வருகிறது.கடந்தாண்டு 1,800 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பினோம். இந்த ஆண்டு 4,150 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பி உள்ளோம். இந்த டீ-ஷர்ட்களில், எஸ்.பி.ஐ., லோகோ மற்றும் யோகா தின லோகோ பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
    • வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர், வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது.

    இதனை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுவை வழியாக நேற்று இரவு 7.45 மணிக்கு சிதம்பரம் வந்தார்.

    அவரை கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    நேற்று இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் தங்கினார். இன்று (புதன்கிழமை) காலை அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு யோகா செய்து தொடங்கி வைத்தார். கவர்னர் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்று யோகா செய்தார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் ஓய்வு எடுத்தார்.

    இன்று மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த மருதூர் கிராமத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது இல்லத்தை பார்வையிடுகிறார்.

    அதன் பின்னர் வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர் அங்கு நடைபெறும் வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

    அதன் பின்னர் காரில் புறப்பட்டு கடலூர், புதுவை வழியாக சென்னை செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும்.
    • இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, சென்னை லைட்ஹவுஸ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல் வெங்கட்ராமன், யோகா பயிற்சியாளர் ருத்ரகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். லைட்ஹவுஸ் இயக்குனரக அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    லைட்ஹவுஸ் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது.

    அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ லைட்ஹவுஸ்போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம்.

    உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம்.

    2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.

    எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது.

    மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இந்தியா கூறுவதை உலக நாடுகள் கேட்டு வருகிறது. பிரதமர் யோகா கலையை ஆரம்பித்து வைக்க வெளிநாடு சென்றுள்ளது பெருமை தரக்கூடியது. பல இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை கடை பிடிக்கின்றனர்.

    குடும்ப தலைவிகள் யோகா நமக்கானது அல்ல என நினைக்கின்றனர். சமையல் கூடத்தில்கூட யோகா செய்யலாம். அவர்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும். குழந்தை வளர்ப்பிலும் யோகாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்காவிட்டாலும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
    • பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    2014-ம்ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21-யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யோக சூத்திரம்: பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.

    இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகிவிட்டது.

    இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.

    யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி:

    உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

    மகராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்டபோது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் கிளாட் வேட் ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.

    1986-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் பிரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.

    'தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. ஆகவே இது சாத்தியமாகிறது' என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.

    1927-ம் ஆண்டு பாரீசில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த - மிதக்கும் - 'லெவிடேஷன்' சக்தி இது என்று அவர் கூறியபோது அனைவரும் வியந்தனர்.

    யோகம் தரும் பயன்கள்: தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும். நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.


    சில பயன்களின் பட்டியல் இதோ:

    1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

    3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஓய்வை உறுதி செய்கிறது.

    4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது லட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

    5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

    6) அகங்காரத்தை நீக்குகிறது.

    7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

    8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

    9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

    10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகசச் செயல்களைச் செய்ய முடியும்.

    11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

    12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

    13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

    14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

    15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

    16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

    17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

    18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

    19) இதற்கு வயது வரம்பு கிடையாது.

    20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

    21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

    23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

    24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.

    25) உடலை மேம்படுத்தலாம்.

    26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

    27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

    28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

    29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

    30) கெட்ட கனவுகள் அகலும்.

    31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

    32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

    34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

    35) வெட்கம் அகலும்.

    36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.

    தலாய்லாமாவின் அழைப்பு: 2000-ம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார்.

    விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார்.

    யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார்.

    மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார்.

    ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் 'தயை' என்னும் தியானம் லாமாவின் மூளையில் இடது பக்க பிரண்டள் கைரசின் செயல்பாட்டைக் காண்பித்தன.

    இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

    வலதுபக்க பிரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். 'தயை தியானத்தில்' லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப்படுத்தியது.


    அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர்.

    திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ 'ஓபன் ஸ்டேட்' என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார்.

    இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.

    பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.

    பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்) வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோசீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    மகரிஷி மகேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

    கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, "உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா" என்று கூறுகிறது.

    யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    ×