என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "yercud"
- ஓமலூர், ஏற்காட்டில் கன மழை பெய்தது.
- பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உள்ளதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக ஓமலூர் ஏற்காடு, மேட்டூரில் நேற்றிரவு மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்றிரவு 9.30 மணியளவில் தொடங்கிய மழை ½ மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசியது. இன்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உள்ளதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 11 மி.மீ. மழை பதிவாகி உ ள்ளது. ஏற்காடு 10.4, மேட்டூர் 9.6, காடையாம்ப்டடி 7, எடப்பாடி 2.4, ஆனைமடுவு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 42.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்