search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yercud"

    • ஓமலூர், ஏற்காட்டில் கன மழை பெய்தது.
    • பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உள்ளதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஓமலூர் ஏற்காடு, மேட்டூரில் நேற்றிரவு மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்றிரவு 9.30 மணியளவில் தொடங்கிய மழை ½ மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசியது. இன்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உள்ளதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 11 மி.மீ. மழை பதிவாகி உ ள்ளது. ஏற்காடு 10.4, மேட்டூர் 9.6, காடையாம்ப்டடி 7, எடப்பாடி 2.4, ஆனைமடுவு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 42.4 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    ×