என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yash"
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இதில், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.
It's difficult to describe in words how heart-wrenching the train tragedy of Odisha is. My deepest condolences to the families of the deceased and praying for the speedy recovery of those injured. Gratitude to the people who have come out in large numbers to help with rescue…
— Yash (@TheNameIsYash) June 3, 2023
- 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது.
- ரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எப். நடிகர் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த சந்திப்பின் போது கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
- கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் யஷ்.
- இவரை சந்திக்க நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். 2007-ம் ஆண்டு வெளியான ஜம்பட ஹுடுகி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான யஷ், அதன்பின் ராக்கி, கோகுல, லக்கி, ஜானு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் நடிகர் யஷ்-ஐ சந்திக்க ரசிகர்கள் அவருடைய இல்லத்திற்கு முன்பு குவிந்துள்ளதாகவும், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஹேஷ் டேக் ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.
- கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யஷ்.
- இவர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது.
யஷ்
சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.
இதையடுத்து வரலாற்று பாணியில் உருவாகவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதில், "இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கிறது, அதை கண்டுபிடிப்பதே சவால்" என்று குறிப்பிட்டுள்ளார்.
There is always a way to reach the target, the challenge is to spot it!!
— Yash (@TheNameIsYash) September 29, 2022
Thank you my man JJ Perry, what a fantastic day!!
Next time it's gotta be Kalashnikov !! 😉 pic.twitter.com/MYDOQohyvT
- நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
- சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.
இந்நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக யஷ் படத்தில் இவர் இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்