search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Health Organization"

    ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜெனீவா:

    ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது.

    இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது.

    இங்கிலாந்தில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல ஜெர்மனியிலும் நோய் தாக்குதல் பல ஆயிரத்தை எட்டியுள்ளது.

    இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெதர்லாந்து நாட்டில் இதனால் பெரிய கலவரமே வெடித்து இருக்கிறது.

    இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ்க்ளுக் கூறியதாவது:-

    ஐரோப்பிய நாடுகள் முழுவதும் டெல்டா வகை வீரிய வைரஸ் பரவி வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். முகக்கவசம் அணிவது, கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மிக முக்கியம்.

    குளிர் காலம் என்பதாலும், போதுமான அளவுக்கு தடுப்பூசி போடாததாலும் பரவல் அதிகரித்து இருக்கிறது. எனவே தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். பொது சுகாதார நடவடிக்கைகளை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ சிகிச்சைகளையும் பின்பற்ற வேண்டும்.

    கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. உரிய அளவில் அதை கட்டுப்படுத்தாவிட்டால் வருகிற மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

    உலக சுகாதார நிறுவனம்

    கொரோனா கட்டுப்பாடு விதிப்பது என்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பது அல்ல. அதை அனைவரும் புரிந்து கொண்டு அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...இந்தியாவில் கடந்த 538 நாட்களில் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு

    கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

    ஜெனிவா:

    உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது.

    இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தின. ஆனாலும் கூட போதுமான ஊசி சிரெஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு ஊசி சிரெஞ்சுக்கு உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

    உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் லிசா ஹெட்மென் இது சம்பந்தமாக கூறியதாவது:-

    உலக சுகாதார நிறுவனம்

    உலகம் முழுவதும் உள்ள ஊசி சிரெஞ்சு தயாரிக்கும் நிறுவனங்களால் ஆண்டுக்கு 600 கோடி சிரெஞ்சுகளையே உற்பத்தி செய்ய முடியும்.

    கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

    அடுத்ததாக 2-வது தவணை ஊசி போடுவதற்காக 700 கோடி ஊசி சிரெஞ்சுகள் தேவைப்படுகிறது. ஆனால் இவற்றை உற்பத்தி செய்வது கடினம். எனவே அடுத்த ஆண்டு 100 கோடி முதல் 200 கோடி ஊசி சிரெஞ்சுகள் வரை தட்டுப்பாடு ஏற்படலாம்.

    இது ஒரு முக்கிய பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரமாக சரிவு

    உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் புறக்கணித்தன.

    ஜெனீவா:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) மக்களுக்கு செலுத்த சில நாடுகள் ஆலோசித்தன.

    இதற்கு உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தது. பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தால் ஏழைநாடுகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் பாதிப்பு அடையும் என்றும் தடுப்பூசி வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தது.

    இதனால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் புறக்கணித்தன. அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடுமையாக எதிர்த்துள்ளது. அத்திட்டத்தை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளது.

    இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பிற அதிக ஆபத்து உள்ளவர்கள் தங்களது முதல் டோசுக்காக இன்னும் காத்திருக்கும் போது ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அர்த்தமற்றது.

    தடுப்பூசி

    ஒவ்வொரு நாளும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளின் முதன்மை அளவை விட 6 மடங்கு அதிகமான பூஸ்டர் தடுப்பூசிகள் உலக அளவில் நிர்வகிக்கப்படுகின்றன. இது ஒரு ஊழல். இது தற்போது நிறுத்தப்பட வேண்டும்.

    உலக அளவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பது மூலமோ அதிக தடுப்பூசிகள், பூஸ்டர்களை வெளியிடுவதன் மூலமோ பரவுவதை கட்டுப்படுத்த நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மற்ற கண்டங்களில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செல்வதை உறுதி செய்வது இன்றியமையானது.

    எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது மட்டுமல்ல யாருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

    ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் தெரிவிரித்த உலக சுகாதார நிறுவனம், அதில் இளைய பருவத்தினரே அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
    நியூயார்க்:

    சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமி‌ஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    அதில், உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அவ்வளவு ஏன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது.

    அதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். அவர்கள் ஒருமுறை அல்லது 2 முறையல்ல. 20 தடவை தற்கொலைக்கு முயன்று தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

    தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம். அவர்களின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை பெருமளவில் பாதிக்கிறது.

    தற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் வி‌ஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இது வருமானம் குறைந்த அல்லது ஓரளவு வருமானம் பெருகிய நாடுகளில் கிராமப் புறங்களில் தான் அதிக அளவில் நடைபெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

    இதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன.

    மனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WHO #SwachhBharatMission
    புதுடெல்லி:

    துய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு சுற்றுப்புற சூழல் மாசு பாட்டில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

    இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

    இதனால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


    சுகாதார குறைபாடு மற்றும் சத்துணவு இன்மையால் இந்தியாவில் குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 1 கோடியே 40 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இத் தகவலை குடிநீர் மற்றும் உடல் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். அப்போது கடும் பணி சுமைக்கு இடையே தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்திய தனது குழுவை பாராட்டினார். #WHO #SwachhBharatMission
    இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #WorldHealthOrganization
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உள்ளது. இத்துடன் சேர்த்து நைட்ரேட் மாசுவும் கலந்து உள்ளது.

    பல மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் சரளை கற்கள், சேறு மற்றும் சகதி உள்ளிட்டவைகளின் கலவை உள்ளது. இவை யுரேனியம் அதிகம் உள்ள கிரானைட் பாறைகளில் இருந்து கிடைக்கிறது.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.



    இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #WorldHealthOrganization
    ×