search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Bank"

    வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். #RemittancesIndia #WorldBank
    வாஷிங்டன்:

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டும் இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம் கோடி ஆகும்.



    இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர்கள் அனுப்பி உள்ளனர். மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலர்களும், 2017ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலர்களும் பணம் வந்தது குறிப்பிடத்தக்கது. #RemittancesIndia #WorldBank

    இறக்குமதி வரியை 200 சதவீதமாக உயர்த்திய நிலையில் அடுத்தகட்டமாக உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் உதவிகள் கிடைக்காத வகையில் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATF
    புதுடெல்லி:

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

    ‘பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி நேற்றிரவு அறிவித்தார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்துக்கு புல்வாமா தாக்குதலில் உள்ள தொடர்புகளை சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்ய இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

    கோப்புப்படம்

    மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் முக்கிய சீராய்வு ஆலோசனை கூட்டம் இன்றிலிருந்து வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் உரிய ஆதாரங்களுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது.

    இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு ஏற்கனவே பாகிஸ்தானை கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #PakistanMFNstatus  #WorldBank #FATF
    துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில், அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. #WorldBank #AbuDhabiGlobalMarket
    துபாய்:

    துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க இந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில் அமீரக நிதித்துறை துணை மந்திரி ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இதன் மூலம் உலக வங்கியின் கிளை அலுவலகம் அபுதாபி குளோபல் மார்க்கெட்டில் விரைவில் திறக்கப்படும். இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    அமீரக துணை மந்திரியும், அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைவருமான அகமது அலி அல் சயீக் கூறும்போது, “உலக வங்கியின் புதிய கிளை அலுவலகம் அமீரக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்” என்றார். #WorldBank  #AbuDhabiGlobalMarket

    ஜி.எஸ்.டி. அமல் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. #WorldBank #IndianEconomy
    வாஷிங்டன்:

    தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.



    2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு வலுவான தனியார் செலவினம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை முக்கியமான காரணிகளாக இருக்கும் என கருதப்படுகிறது. #WorldBank #IndianEconomy

    முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசிய உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர். #KeralaFloods #WorldBank
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த பேய் மழையால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் பலத்த சேதம் அடைந்தது.

    சாலைகள், வீடுகள், மின் கம்பங்கள், பயிர் நிலங்கள், வாகன சேதம் என மாநிலத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    மழை ஓய்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கேரளாவை மறு கட்டமைக்க பல்வேறு நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி உள்ளது.

    கேரளாவில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி மூலம் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வந்தது. தற்போது மழை பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த உலக வங்கி கூடுதல் கடன் உதவி வழங்க முன் வந்தது.

    இதையடுத்து உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ் சாம் அப்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சியோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் சென்றனர். அங்கு மாநில நிதி மந்திரி தாமஸ் ஐசக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இச்சந்திப்புக்கு பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.



    இந்த நிதி மூலம் கேரள மாநில அணைகளின் பராமரிப்பு, சாலைகள் சீரமைப்பு, மின் கட்டமைப்பை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும். உலக வங்கி அளிக்கும் நிதி உதவியைபோல ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் உதவி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல சர்வதேச நிதி ஆணையம் மூலமும் கடன் உதவிகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயிர் கடன்கள், விவசாய மறு கட்டமைப்பு, பயிர் நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமும் நீண்ட கால கடன் உதவி பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #KeralaFloods #WorldBank
    உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலக வங்கியானது தெற்காசிய ஹாட்ஸ்பாட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெப்பநிலை உயர்வு மற்றும் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை தரத்தை பாதிக்குமா என்பதை அறிய எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2050 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பாதி பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறையும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

    பருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம். குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும். இந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம். இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


    ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் வெப்பநிலை 2050-ம் ஆண்டிற்குள் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த கிஷன்கங்கா புனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு முறையீடு செய்கிறது. #Kishanganga #Induswaterstreaty #WorldBank
    வாஷிங்டன்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 171 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

    கிஷன் கங்கா ஆற்று நீரை பாதாள கால்வாய் மூலம் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த திட்டப் பணிகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தத்துக்கு முரணாகவும், எதிராகவும் அமைந்துள்ளதாக கடந்த 17-5-2010 அன்று சர்வதேச முறையீட்டு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது.



    இதே பகுதியில் 969 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீலம்-ஜீலம் புனல் உற்பத்தி நிலையம் ஒன்றை பாகிஸ்தான் அமைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின்  கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டில் தீர்ப்பளித்து இருந்தது.

    இதைதொடர்ந்து பணிகள் நிறைவடைந்து ஆண்டுக்கு சுமார் 171 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்த நிலையில், கிஷன்கங்கா புனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் முறையீடு செய்ய பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

    கிஷன்கங்கா ஆற்றுப் பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும் உலக வங்கி தலைவரை சந்தித்து பேசுவதற்காக பாகிஸ்தான் அரசின் தலைமை வழக்கறிஞர் அஷ்டர் அவுசப் அலி தலைமையில் நான்கு உயரதிகாரிகளை கொண்ட குழுவினர் வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தலைமை தூதர் ஐஜாஸ் அகமது சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார். #Kishanganga #Induswaterstreaty #WorldBank
    ×