search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker"

    • ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
    • அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.

    பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்திராயிருப்பு அருகே விவசாய தொழிலாளி மோட்டார் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
    • மகளுக்கு திருமண நிச்சயம் செய்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை அடுத்துள்ள ஆத்தங்கரை பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவருக்கு கிருஷ்ணம்மாள் (39) என்ற மனைவியும், மகன் மகள்களும் உள்ளனர்.

    ராஜா மற்றும் அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாயம் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜா தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தி ருந்தார். இதற்காக உறவினர் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்து வந்தனர்.

    சம்பவத்தன்று கிருஷ் ணம்மாள் மட்டும் திரும ணத்திற்கு அழைப்பிதழை கொடுக்க வெளியூர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்பு ஊர் திரும்பிய கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணம்மாள் உடனே கூமாபட்டி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே வாடிப்பட்டி குமரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையன் மகன் சரவணன் (24). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.இவர் பாலமேடு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது குறித்து அவருடைய தாய் சரஸ்வதி அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வரு கின்றனர்.

    திருமங்கலம் மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (47). கொத்தனாரான இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகன் மனைவி ராமுத்தாய் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை-திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சர்வீஸ் ரோட்டில் ஒருவர் சாலையோரம் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாலையோரம் அடிபட்டு கிடந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.

    இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.

    தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றனர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.
    • லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.
    • திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவ ட்டம் வலங்கைமான் அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவ் ராசப்பன் (வயது 55) தொழிலாளி.

    இவர் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த சக பணியாட்கள் 108 ஆம்புலனசை வரவ ழைத்தனர்.

    பின்னர் மயங்கி விழுந்த ராசப்ப னை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகன் ஸ்டாலின் (வயது 32). இவர், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக

    அனுமதி க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் காசநோய் இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்துராம லிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபோதகர் (வயது32). வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி ஜெனிட்டா (23). இவர்க ளுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வபோதகர் தனது தாய்-தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் செல்வபோதகர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மனைவி செல்போனில் அழைத்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

    பின்னர் கணவரின் தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    அவர் விசாரித்த போது விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் ரெயில்வே பாலம் அருகே செல்வபோதகர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் ஜெனிட்டா புகார் கொடுத்தார்.

    அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர்.
    • தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள மலையாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜா என்ற மரியலூயிஸ்ராஜா (வயது 42) என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியரா ஜாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இசக்கிமுத்து நேற்று ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த பரமசிவன், இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன் குளத்தை சேர்ந்த பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ. 150-ஐ பறித்து சென்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை தேடி வருகிறார்.

    • கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×