search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife arrested"

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை காதலுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொல்ல முயனற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணகுமார் வயநாட்டில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கிருஷ்ணகுமார் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சுஜாதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 35) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து கணவருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருப்பதால் கணவரை கொன்று விடலாம் என்று கள்ளக்காதலனிடம் கூறினார். இதனையடுத்து ரூ.4 லட்சம் கொடுத்து 4 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். கணவரின் நடவடிக்கைகளை சுஜாதா அவ்வப்போது கள்ளக்காதலுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவர் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்தார்.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு கிருஷ்ணகுமார் வெளியூர் புறப்பட்டார். அவர் சென்ற பின்னர் அவர் என்ன ஆடை அணிந்துள்ளார். எந்த வழியே செல்கிறார் என்பது உள்பட அனைத்து விபரங்களையும் சுஜாதா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார். கள்ளக்காதலன் இது குறித்து கூலிப்படைக்கு தகவல் கூறினார்.

    கிருஷ்ணகுமார் வடக்காஞ்சேரி ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் ரோட்டை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அதே கார் திரும்பி வேகமாக வந்தது. அப்போது சுதாரிப்பதற்குள் கிருஷ்ணகுமார் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு வலது கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விய்யூர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீஜித், ஆன்ந்த் ஆகியோர் காயம் அடைந்த கிருஷ்ணகுமாரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் மோதிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மோதிய கார் எண்ணை வைத்து சைபர்செல் போலீசார் உதவியுடன் கூலிப்படையை சேர்ந்த ஓமனகுட்டன், சஜித், நசுரூதீன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கூறிய தகவல்படி மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. கார் மோதிய வேகத்தில் கிருஷ்ணகுமார் இறந்திருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதாக கூலிப்படையினர் கூறினர்.

    இதனயைடுத்து போலீசார் சுஜாதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுரேஷ்பாபு ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் இன்று சிட்டி கமி‌ஷனர் ராஜூ விசாரணை நடத்துகிறார். #tamilnews
    கேரள மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் சாகத் (வயது 34). மீன் வியாபாரி. இவரது மனைவி சவுஜத் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பஷீர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். வெளிநாடு சென்றபோதும் செல்போன் மூலம் கள்ளக்காதல் ஜோடி காதலை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர். இதற்கு தடையாக உள்ள கணவரை கொலை செய்ய திட்டம் வகுத்தனர். இதற்கு உதவுவதாக பஷீரின் நண்பர் ஒப்புக்கொண்டார்.

    திட்டப்படி பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார். பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் சவுஜத்தின் வீட்டுக்கு சென்றனர். சவுஜத் கதவை திறந்து வைத்திருந்தார்.

    அப்போது சாகத் தனது 4 வயது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். திறந்த வீட்டுக்குள் புகுந்த பஷீர் நேராக சாகத்தின் அறைக்குள் சென்றார். அங்கு தூங்கிய சாகத்தின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி ஓங்கி அடித்தார்.தந்தையின் அலறல் சத்தம்கேட்டு குழந்தை அழுதது. குழந்தை அழுவதை கண்ட தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை மீட்டு மற்றொரு அறையில் அடைத்தனர்.

    ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த சாகத்தை மீண்டும் இரும்பு கம்பியால் பஷீர் பலமுறை தாக்கினார். இறந்துவிட்டதாக நினைத்து பஷீர் வேகமாக காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சகாத் உடலை மெதுவாக அசைத்தார். அப்போது இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரமடைந்த மனைவி மீன் வெட்டும் அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். இதில் ரத்தம் பீறிட்டு அறை முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் சகாத்தின் உயிர் பிரிந்தது.

    பின்னர் மர்ம நபர் கணவரை கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இது குறித்து தானூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி சவுஜத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சவுஜத்திடம் தீவிர விசாரணை நடத்தியபோது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை விமானத்தில் வரவழைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

    இதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலன் பஷீரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    மது குடித்து வந்து தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் குமரப்பராஜன், (வயது 51), தொழிலாளி.

    குமரப்பராஜனின் மனைவி பானுமதி. குமரப்ப ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்து விட்டு தெருவில் மயங்கி கிடப்பது வழக்கம். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். பின்னர் வீடு அருகே மயங்கி கிடப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல மது குடித்து மயங்கி கிடந்த குமரப்பராஜன் திடீரென இறந்து போனார்.

    அதிக போதை காரணமாக குமரப்பராஜன் இறந்து விட்டதாக அவரது மனைவி பானுமதி தெரிவித்தார். உறவினர்களும் இதனை நம்பினர். 

    குமரப்பராஜன் தெருவில் இறந்து கிடந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையில் குமரப்பராஜன் தலையில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட தகவலை தொடர்ந்து போலீசார் குமரப்பராஜன் சாவு குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. குமரப்பராஜனை அவரது மனைவியே அடித்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரப்பராஜனின் மனைவி பானுமதியை பிடித்து விசாரித்தனர்.

    பானுமதி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை தள்ளி விட்டு கம்பால் அடித்ததாகவும் அவர், மயங்கி விழுந்து இறந்து போனதும் தெரியவந்தது. அதன் பிறகே பானுமதி போதையில் கணவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்து நாடகமாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பானுமதியை கைது செய்தனர். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் குமரப்பராஜன். கூலித் தொழிலாளி. வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் அனைத்தையும் குடித்தே செலவு செய்தார். குடும்பச் செலவிற்கு பணம் தருவதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வார். என்னையும் அடித்து உதைப்பார். சம்பவத்தன்றும் இதுபோல குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைத்தார். அவரிடம் இருந்து தப்பிக்க நான், கணவரை தள்ளி விட்டேன். கம்பலாலும் அடித்து விரட்டினேன். 

    அவர், சத்தம் போட்டப்படி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தேடிச்சென்ற போது அவர், இறந்து விட்டது தெரியவந்தது. கணவரிடமிருந்து என்னை தற்காத்து கொள்ளவே அவரை தாக்கினேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தக்கலை அருகே காதல் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சுசி பிரியா (வயது 29). சுசிபிரியாவுக்கும், கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டி ஜெனித் (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணம் நடந்த சில ஆண்டுகளில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் சுசிபிரியாவும், கிறிஸ்டி ஜெனித்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இடையே விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சுசிபிரியா நேற்று தக்கலை போலீசில் கணவர் கிறிஸ்டி ஜெனித் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

    தக்கலை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள என் வீட்டில் நேற்று மாலை நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது கிறிஸ்டி ஜெனித்தும், மேலும் 4 பேரும் ஒரு காரில் அங்கு வந்தனர். அவர்கள் என்னை வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றனர்.

    நான் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். அப்போது அவர்கள் என்னை கார் ஏற்றி கொல்ல முயன்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    சுசிபிரியா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சுசிபிரியாவின் கணவர் கிறிஸ்டி ஜெகன் மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கிறிஸ்டி ஜெகன் கைது செய்யப்பட்டார். மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஜலகண்டாபுரம் அருகே கணவர் மீது திராவகம் வீசிய மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    ஜலகண்டாபுரம்:

    ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள்(35). இவர்களுக்கு சிவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் மனைவி மாதம்மாளுடன் தனிவீட்டில் வசித்துவரும் மகன் சிவாவை, நாகப்பன் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்தநிலையில் மகன் சிவாவை பார்க்க நாகப்பன் சென்ற போது அங்கு அவன் இல்லை என்று தெரிகிறது. அப்போது அங்கு வந்த மாதம்மாளிடம் சிவா எங்கு என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்த கட்டையால் நாகப்பனை, மாதம்மாள் அடித்து, அங்கிருந்த திராவகத்தை அவர் மீது வீசினார். இதில் படுகாயமடைந்த நாகப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். 
    ×