search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wheat Recipes"

    • குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 10,

    கோதுமை மாவு - 150 கிராம்,

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    பால் - 100 மில்லி,

    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

    நெய் - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

    இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

    பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

    • சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    சப்பாத்தி - 6

    பெரிய வெங்காயம் - 3

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

    அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.

    இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி.

    குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கேழ்வரகு மாவு - 1/2 கப்,

    கோதுமை மாவு - 1/2 கப்,

    ஓமம் - சிறிதளவு,

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,

    லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,

    உப்பு - தேவையான அளவு,

    ண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.

    இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.

    • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வது மிகவும் நல்லது.
    • இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

    அரைக்க:

    பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

    வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர் மாவை சப்பாத்தியாக திரட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.

    அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/4 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!

    • இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 1

    மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    ஓமம் - 1/2 தேக்கரண்டி

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

    பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

    சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

    • மாலையில் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை செய்து தரலாம்.
    • இந்த தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    ஏலக்காய் - 4,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.

    • இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
    • சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை ரவை - 1 கப்

    பாசி பருப்பு - அரை கப்

    உப்பு - சுவைக்கு

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    தண்ணீர் - 3 கப்

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி - 6

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.

    அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

    பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.

    விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.

    அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.

    கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒரு கப்,
    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
    எலுமிச்சம்பழம் - அரை மூடி,
    நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - 2.

    செய்முறை:

    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

    பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

    வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    டயட்டில் இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பாலக்கீரை கோதுமை தோசை மிகவும் நல்லது. இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 அங்குல துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரை, வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

    வதக்கிய கீரையை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகமாக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக்கீரை கோதுமை தோசை ரெடி.

    மழை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட கோதுமை மாவு தட்டை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்
    பாசிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
    சோள மாவு - 4 மேசைக்கரண்டி
    எள் - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெண்ணெய் - 50 கிராம்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பாசிப்பருப்பை அரை அணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய் மற்றும் இஞ்சி துண்டை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, அரைத்து வைத்திருந்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வெண்ணெய்யை சிறிது சிறிதாக சேர்த்து மாவை கிளறவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, எள், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    இப்போது அதில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும்.

    5 நிமிடங்கள் கழித்து சப்பாத்தி திரட்டுவது போல் மாவை திரட்டி உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி துண்டு போட்டு கொள்ளவும்.

    அவற்றை சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தால் மொறுமொறுப்பான கோதுமை மாவு தட்டை ரெடி.
    ×