search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water truck"

    • சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது.
    • மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

    தாம்பரம்:

    பல்லாவரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள்(வயது48).

    கணவன்-மனைவி இருவரும் திருமுடிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் சரிந்தது. இதில் சின்னையாவும், அவரது மனைவி நாகம்மாளும் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் நாகம்மாள் சிக்கிக்கொண்டார். இதில் அவரது தலை துண்டாகி தனியாக வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்பு நாகம்மாள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட கணவர் சின்னையா கதறி துடித்தார். மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் சாலையோரங்களில் அடிக்கடி மாடுகள் படுத்து கிடப்பதும், சுற்றுவதும் அதிக அளவில் உள்ளது. இது பற்றி வாகன ஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த சாலையில் குறுக்கே செல்லும் மாடுகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனை தடுக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற விபத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிரை (வயது39). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நள்ளிரவு 1மணி அளவில் வேனில் மெட்ரோ ரெயில் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அண்ணா நகர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ரோகிணி தியேட்டர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு பழுதாகி நின்று கொண்டு இருந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் மெய்யிரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த மெட்ரோ ரெயில் ஊழியர்களான பாலசந்திரன், ரமணா இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை கழிவுநீர் ஏற்றும் நிலையம் கல்லறை சாலையில் உள்ளது. நேற்று மதியம் இதன் அருகே ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் நோக்கி வந்த ஒரு குடிநீர் லாரி அவர்மீது மோதியது. இதில் அந்த பெண், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மஞ்சள் நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். அவர் வைத்திருந்த பையில் காய்கறிகளும், துணிகளும் இருந்தன.

    லாரியை ஓட்டிய கிளீனர் அஜித்குமார் (20) கைது செய்யப்பட்டார். காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். #Accident
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ஓமன் மேத்யூ. இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (12).

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் தனது சித்தப்பாவுடன் ஜெமீமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் ஜெமீமா தவறி கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி சென்ற மாணவி சீருடையுடன் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. #Accident

    வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.

    காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.

    12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

    இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.

    மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck

    ×