search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vision"

    • மேற்கூறை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் சரணாலயம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே சோழன் அருங்காட்சியம் அமைப்பது குறித்தும் பார்வையிடப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம், ஆதார் சேவை மையத்தின் செயல்பா டுகள் குறித்தும், மாநகராட்சி மேம்பாலம் அருகே மாற்றுதி றனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல்நி லைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தோம்.

    மாவட்ட மைய நூலகத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூறை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவு றுத்தப்பட்டது.

    இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி திருவள்ளுவர் வணிக வளாக கட்டிட பணிகள், அய்யாசாமி வாண்டையார் நினைவு பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காந்தி சாலை கல்லணை கால்வாய் அருகே ராணி வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமேன சம்பந்தப்பட்ட அலுவர்க ளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர் கீதா, வட்டாட்சியர் சக்திவேல், மாநகராட்சி செயற்பொ றியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய மாமுனி வருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புராண காலத்தில் 4 வேதங்களும் பூஜை செய்தும், மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.

    இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் அகத்தி யருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதீனம், செவ்வந்திநாத பண்டார சன்னதி, கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதினம், செவ்வந்தி நாதபண்டார சன்னதி ஸ்தத்தார், கயிலைமணி வேதாரத்தினம், கேடிலியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சோழிய வேலாளர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • அவென்யூ பகுதிகளில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுபோல் ரயிலடி தோப்பு தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமைய லறை ரூ.23 லட்சம் செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. காமராஜர் அவென்யூ பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், கணக்கர் ராஜ கணேஷ், கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், முபாரக்அலி, பாலமுருகன், நாகரத்தினம் செந்தில் உடன் இருந்தனர்.

    ×