என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vishnu"
- பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
- திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.
பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.
இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.
பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.
ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.
தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.
திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.
பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.
ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.
பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.
ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.
லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.
இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.
- ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
- அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.
ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.
அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.
பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.
அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.
இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.
எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.
ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42ம் ஆகும்.
- சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.
- சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத் தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.
விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர் கொண்டு பூலோகம் வந்து கடும் தவம் செய்தார்.
தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான்.
நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.
அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.
அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.
அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.
சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108.
இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.
ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.
இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.
மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.
ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.
இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.
அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.
அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதி தேவியாக்கி இறைவனை வழிப்படனும்.
அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்.
இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும்.
காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கணும்.
சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது.
சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.
இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம்.
- தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
- சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.
துளசி என்பது ஆன்மிகம் சார்ந்த பொருள் அல்ல.
அது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒரு பொருளாகவே தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் முழு மூச்சுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெருமாளை தரிசனம் நடத்தி முடித்ததும் தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
இதன் புனிதத் தன்மையையும், தூய்மையையும் நம்பாதவர்கள் இதன் பயன்களை அங்கீகரிப்பது இல்லை.
இந்து மதத்தவர்கள் வீடுகளில் இறை சமமாக கருதியே துளசி செடியை நட்டு வழிபடுகிறார்கள்.
துளசி மாடம் கட்டி விளக்கேற்றி பராமரிக்கவும் செய்கிறார்கள்.
கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தத்துக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று நாம் கண்டறிந்துள்ளோம்.
துளசி தீர்த்தத்திற்காக நாம் கோவிலுக்கு செல்ல வேண்டியது இல்லை.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார் செய்யலாம்.
சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் மூதாதையர்கள் கடை பிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.
ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் 4 அல்லது 5 துளசி இலைகளை பறித்து இட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம்.
- துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
- மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.
துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
இதை செய்யும் முறை மிகவும் எளிதானது.
சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும்.
இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அள வில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத் தில் இட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி,
ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும்.
மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.
இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
- ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டது போல் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
- 7-7 நேர் புள்ளிகளை பயன்படுத்தி, பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரைய முடியும்.
துளசி மாடக் கோலம் 7-7 நேர்ப் புள்ளி வலை அமைப்பில் இடப்பட்ட புள்ளிகளை சுற்றி செல்லும் வளை கோடுகளை பயன்படுத்தி வரையப்பட்ட ஒரே மாதிரியான 6 கூறுகளை இணைத்து பெறப்பட்டுள்ளது.
இவ்வாறான கூறுகளை ஒன்றுடன் ஒன்று மூலைகளில் தொடுத்து கோலத்தை விரிவாக்கம் செய்யலாம்.
இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவ அமைப்புக்கோ எந்தவித எல்லையும் கிடையாது.
கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.
கோலம் வரைபவரின் கற்பனை சக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக் கொள்ளலாம்.
ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டது போல் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
7-7 நேர் புள்ளிகளை பயன்படுத்தி, பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரைய முடியும்.
அதுமட்டுமின்றி 7-7 நேர்ப் புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்தோ, கூட்டியோ கூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை நாம் உருவாக்கலாம்.
- எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.
- துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும்.
எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.
துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும். துளசி படர்ந்த இடம் பிருந்தாவனம் ஆகும்.
துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா.
துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு 1,000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
பவுர்ணமி, அம்மாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை எண்ணை தேய்த்துக் கொண்டு துளசியை பறிக்க கூடாது.
அதிகாலை பொழுதும் சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டே துளசியை பறிக்க வேண்டும்.
துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
- மகாஞானி யோகமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.
சங்கு, துளசி, சாளக்கிரா மம், (புண்ணிய நதிகள் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு
மகாஞானி யோகமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.
சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
- கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
- இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.
அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள்.
ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தாள்.
இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.
ஆனால் தராசு சமமாகவில்லை.
அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.
அப்போது தராசு சமமாகியது. இது கண்ணன் புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.
நான் எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மை யான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார்.
தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூட்டிக் கொண்டாள்.
- மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
- வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
வழக்கமாக ஆன்மிக அன்பர்கள் தங்களது பக்தியின் வெளிப்பாடாக காதுக்கு பின்புறம் துளசி மற்றும் பூக்களை வைத்துக் கொள்வது இயல்பான ஒன்று.
காதுக்குப்பின் துளசி கதிர் அல்லது இலை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள்.
அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவது உண்டு.
ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள்.
மனித உடலில் மிகக் கூடுதலாக உறிஞ்சும் சக்தி உடையது காதுக்கு பின்புறம் உள்ள பகுதி ஆகும்.
இதை விஞ்ஞானம் நிரூபித்து இருக்கிறது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம்.
இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்பின் உள்ள சருமம் வழியாக ஊடுருவி செல்லும்.
இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையைச் சூடி வந்ததும், பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும் ஆகும்.
பழங்காலத்தில் உள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஒரு புனித செடியாக பராமரித்து வளர்த்து வந்தனர்.
சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்தில் வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று நம் முன்னோர்கள் போதித்துள்ளனர்.
வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
துளசி தரையில் நடுவதற்காக கிருஷ்ண துளசியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வது ஆகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.
துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்போது,
''பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லையே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யஹம்"
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துளசிப்பூ பறிக்க கூடாது,
துளஸ்வமுத சம்பூதா
சதா த்வாம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே"
என்று சொல்ல வேண்டும்.
மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
அதேபோல பூஜை செய்யாமல் துளசியை பறிக்கக்கூடாது.
- அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.
- ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.
காடுமேடுகளில் எல்லாம் வளரும் தன்மை கொண்டது துளசி.
இது ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.
துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து முடிவில் மோட்சத்தை அடைகிறார்கள்.
எந்த இடத்தில் துளசி செடி பிடி அளவேனும் இருக்கிறதோ அந்த இடத்தில் நாராயணன் போன்ற தேவர்கள் நித்யாவாசம் செய்கிறார்கள்.
யாருடைய உடலானது துளசியினால் கொளுத்தப்படுகின்றதோ அவருடைய உடலானது சகல பாவங்களையும் நீக்கி கொள்கிறது.
துளசி மாலையை அணிந்து கொண்டு யார் பிராணனை விடுகின்றாரோ அவருடைய உடல் தொடர்பான பல பாவங்களும் போய் விடுகின்றன.
அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.
என்னை மனதில் வைத்து
என்றும் தொழுதெழுவாரென்
கண்ணின் கருணையினால்
கவலையின்றி வாழ்ந்திடுவார்!
மின்னல் இடி மலைகள்
மேல் வருநற் தீவினைகள்
மெல்ல விலகி நின்று
மேன்மை கனியச் செய்வேன்!
எண்ணும் பிணி நீக்கி
என்றென்றும் காத்திடுவேன்
எண்ணரிய ஐஸ்வர்யம்
இவர்க்காக நான் கொடுப்பேன்!
மண்ணில் கிடைக்காத
மகத்துவமும் தான் கிடைக்க
மானாத வாழ்வழிப்பேன்
மகிழ்வில் வைப்பேன்!
தாரித்ர்யம் நீக்கித்
தக்க வரம் தந்திடுவேன்
தன்னேரில்லாத மணம்தான்
நடத்தி வைத்திடுவேன்!
கன்னியர் பூஜை செய்யக்
கஷ்டம் தவிர்ப்பேனே
எண்ணுகிற மணவாளர்
இவர்க்கு கிடைப்பாரே!
கண்ணியமே மிக்குடைய
கிரகஸ்தர் எனைத் தொழுதால்
காட்சிக்கு எளிமை எனக்
கனிந்து நான் காத்திடுவேன்!
மும்மூர்த்தி போற்றி நிற்க
மோட்சப் பதம் தருவேன்
முழுதாக காத்து நிற்கும்
முதல்வியும் நானாவேன்!
மோட்சப் பதம் தருவேன்
முக்தியும் நான் தந்திருப்பேன்
மோக மழை ஆன என்னை
முழுதாய் உணர்ந்திருக்க
கோடி காராம் பசுவை
கொண்டு வந்து கன்றுடனே
கொம்புக்கு பொன்ன மைத்துக்
குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கைக் கரையினிலே
கரதுகிரண காலத்திலே
கருதியே வாலுருவி
அந்தணர்க்கு மகாதானம்
செங்கையில் செய்த பலன்
கீர்த்தியெல்லாம் நான் தருவேன்!
அங்கே சிவப்பான
அரியவன் தான் ஆணையிது
மங்கைத் துளசியெனை
மகிழ்ந்தே தொழுதேத்த
மாதவத்தோர் வாழ்ந்திருப்பார்
மாறாத தன்னருளால்
எங்கள் திருக்கோலம் இல்லின்
மணக்கோலம்
கங்கைக்கரை கோலம் காரளந்தான்
பொற்கோலம்
மங்காப் பழமையெங்கள்
மகிமை உரைத்துவிட்டேன்!
இப்பாரில் எப்போதும்
இருந்து தவம் செய்யும்
மங்கை துளசியின்று மனம்
வைத்துத் திருவிளக்கில்
வந்து படிந்து விட்டேன்
வாடாமலர் சூட்டேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்