search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villages"

    மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. #MyanmarFlood
    யாங்கூன்:

    மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

    மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஸ்வர் சாங் அணை நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருக்கும் இந்த அணை முறையாக பராமரிக்கப்படாததாலேயே அணை உடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. #MyanmarFlood
    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு இடைவிடாது கன மழை பெய்ததால் பேரிஜம் ஏரி, கொழுவம்பட்டியில் உள்ள கோணலாறு ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது.

    இந்த தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடி அமராவதி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட் உள்ளிட்ட செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இடைவிடாது பெய்த கன மழையினால் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மின் கம்பிகள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும் மின்சாரம் இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    போளூரில் மூதாட்டி கொலை சம்பவத்தை தொடர்ந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் ஒரு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

    இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.

    சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.

    தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.




    ×