என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "viduthalai"
- வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை
இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'விடுதலை' திரைப்படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் படக்குழுவை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் 'பொல்லாதவன்' திரைப்படத்தில் இருந்தே வெற்றிமாறனோட மிகப்பெரிய ரசிகன். எப்போதும் போல் கலக்கலாக படத்தை எடுத்துள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று கூறினார்.
- ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது.
- இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த்
மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, விடுதலை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சூரி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ரஜினி பதிவு
அதில், 'இதுவரை கிடைத்த வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யாரை பார்த்து பிரமித்து சினிமாவிற்கு வரணும்னு நினைத்தேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்கிறேன். இறைவனுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி @rajinikanth#ViduthalaiPart1 pic.twitter.com/PChgWfvE6c
— Actor Soori (@sooriofficial) April 8, 2023
- வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை
மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.
ரஜினிகாந்த் பதிவு
சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023
- சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
- இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றிக்காக நன்றி தெரிவித்து சூரி பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொது மக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கு எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
❤️❤️❤️??? pic.twitter.com/72TZvZpOhY
— Actor Soori (@sooriofficial) April 3, 2023
- சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
- இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டேக் ரயில் காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Here's the making of the jaw-dropping single take train sequence ➡️ https://t.co/Aok5PbLEw4
— Red Giant Movies (@RedGiantMovies_) April 3, 2023
Catch #VetriMaaran 's #ViduthalaiPart1SuperHit in cinemas near you now. @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @BhavaniSre @Chetan_k_a @VelrajR @DirRajivMenon @menongautham pic.twitter.com/VHxdvpZCdU
- சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
- இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தங்க காசு வழங்கி உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்பட்ம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் வெற்றிமாறன், பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கியுள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை.
- விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூரி, விடுதலை படம் குறித்தும் இளையராஜாவுடன் பணிபுரிந்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இளையராஜா சாரை நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து நேரில் பார்த்ததே கிடையாது. அந்த வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. விடுதலை படத்தின் மூலம் தான் அவரை அருகில் அமர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடல் தான் முதன் முதலில் இளையராஜா சார் புதிய ஸ்டியோவில் பதிவு செய்யப்பட்டது.
அந்த பாடல் பதிவு செய்யும் பொழுது இளையராஜா சார் என்னை பார்த்து உறைந்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி பதட்டமாகிவிட்டது. எனது 45 ஆண்டு கால அனுபவத்தில் என்னுடைய கதாநாயகனை எதிரே அமரவைத்து டியூன் போட்டு காட்டியதே இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை நீங்க முதல் படத்திலே அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது எல்லாம் என்னுடைய தாய் தந்தை செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
- இப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்கில் பாதியில் படம் நிறுத்தப்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றிருந்தது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த இப்படத்தை போலீசார் பாதியில் நிறுத்தி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி படம் பார்க்க வந்த சிறுவர்களை வெளியே செல்ல கேட்டுக்கொண்டனர்.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வளர்மதி என்ற பெண் தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான படத்தை காண்பிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் என்றும், இப்படம் ஆபாச காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் வழங்கவில்லை மாறாக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலே 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் திரையரங்கில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட 'விடுதலை'படத்தை, தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'விடுதலை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எல்ரெட்குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விடுதலை’.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இப்படத்தின் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விடுதலை
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளார். அதாவது, உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து உள்ள உத்திரமேரூர் என்ற பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருப்பதாகவும் இந்த நிலத்தை எந்த காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்றும் வீடு கட்டி அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பைக், கார் போன்ற ஆடம்பர பரிசுகள் கொடுக்கும் திரையுலகினர் மத்தியில் வெற்றிமாறன் வித்தியாசமாக நிலம் வாங்கி கொடுத்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
- வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
விடுதலை
இந்நிலையில், இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.
தொல். திருமாவளவன் -வெற்றிமாறன்
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்