search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary"

    • 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பனைக்குளத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பனைக்கும் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஜமாஅத் செயலாளர்கள் முகமது ரோஸ் சுல்த்தான், சாகுல் ஹமீது, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் செய்குல் அக்பர், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், ஒருங்கினைப்பாளர் அபு முகம்மது, உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகம்மது ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

    இம்முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவி பவுசியாபானு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அசோலா பாசி வளர்ப்பிற்கான படுக்கைகள் வழங்கப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி, ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 80 பயனாளிகளின் 146 மாடுகள், 365 வெள்ளாடுகள், 85 செம்மறியாடுகள், 175 கோழிகள், 8 நாய்கள் பயன் பெற்றன. முடிவில் சமூக ஆர்வலர் சிராஜ் மைதீன் நன்றி கூறினார்.

    • முகாமில் 300 கால்நடைகள் கலந்துகொண்டு பயனடைந்தன.
    • கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தாது உப்புகளும் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் கோவிஅய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பம்பைப்படையூர் எஸ்.கே.முத்துச்செல்வன் தலைமை வகித்து கால்நடை சிறப்பு முகா மினை துவக்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களுக்கு சிறந்த கன்று பரிசு, சிறந்த மேலாண்மை விருது ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மண்டல இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பு டாக்டர் பாஸ்கரன், நோய் புலனாய்வு கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேலு, கால்நடை உதவி மருத்துவர்கள் அய்யம்பேட்டை ஏஞ்சலா சொர்ணமதி, சுந்தர பெருமாள் கோவில் கார்த்திகேயன், கால்நடை ஆய்வாளர் சிவசக்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வேளாண்மை இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வேளாண்மை உதவி அலுவலர்கள் திரிபுரசுந்தரி சதீஷ்குமார், பாபநாசம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் கலீல், திமுக நிர்வாகிகள் பாலு, யூசுப் அலி, அஷ்ரப் அலி, புகழேந்தி, ஷாஜகான், அண்ணாதுரை, ராஜேஷ், ஆனந்தன், ஜாகித், அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் மாடு, ஆடு, நாய், பூனை, கோழி ஆகிய 300 கால்நடைகள் கலந்துகொண்டு பயனடைந்தன இம்முகாமில் தடுப்பூசி, சிகிச்சை, சினை பரிசோதனை, சினை ஊசி, கருசிதைவு நீக்கும் தடுப்பூசி, குடல் புழு நீக்கம் ஆகியவை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் தாது உப்புகளும் வழங்கப்பட்டது.

    முடிவில் கணபதி அக்ரஹாரம் கால்நடை உதவி மருத்துவர் சங்கமித்ரா நன்றி கூறினார்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாதாணிக்கோட்டகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரையின் பேரில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார், கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணகுமார் , சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை,மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன, இதில் சிறந்த கால்நடை கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மற்றும் மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் ஆகியோாரின் ஆலோசனை பேரில் நடைப்பெற்றது.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை உதவி டாக்டர்கள் சண்முகநாதன், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.

    இதில் 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் பரிசு வழங்கினார்.

    இதில் கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரை பேரில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சோழன், கால்நடை உதவி மருத்துவர்கள் முருகேசன், சண்முகநாதன், சரவணகுமார், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

     வெள்ளகோவில்.டிச.28-

    வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி கள்ளமடை என்ற இடத்தில் திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பிரகாசம் தலைமையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 865 செம்மறி ஆடுகள், 137 வெள்ளாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.

    நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவதால் வெள்ளகோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8 கால்நடை மருந்தகங்களில்,கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து கால்நடைகளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர் பகலவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் முன்னாள் பாசன சபை தலைவர் துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    முகாமில் பசுமாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மற்றும் சத்து மாத்திரைகள், கிருமி ஒழிப்பு டானிக்குகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • பூவளத்தூரில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே பூவளத்தூர் கிராமத்தில் அரசு சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முகாமினை போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ரஜினி ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

    இந்த முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் மற்றும் கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய கால்நடை களுக்கு தாது உப்பு கலவைகளும், ஊறுகாய் புற்களும் வழங்கப்பட்டது.

    கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    முகாமில் வழக்கறிஞர் பரமசிவம், கால்நடை ஆய்வாளர் சுப்புகாளிமுத்து, ஊராட்சி செயலர் பயனா ளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமானாங்கரை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அகத்தியன், சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் இளமதி, கால்நடை உதவியாளர்கள் அன்னலட்சுமி, தங்கராசு ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    193 மாடுகளும், 486 வெள்ளாடுகளுக்கும், 235 செம்மறியாடுகளுக்கும், 38 நாய்களுக்கும், 415 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர்

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமை தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் விஜய்ஸ்ரீ, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் மனோஜ் குமார், புனிதா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர். இதில் 550 பசு மாடுகள், 1700 செம்மறி ஆடுகள், 360 வெள்ளாடுகள், 400 கோழிகள் ஆகியவற்றிற்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

    ×