search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Salad"

    தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பாசிப்பயறு - 5 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 3 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - விருப்பத்திற்கு ஏற்ப



    செய்முறை :

    பாசிப்பயறு, மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான முளைகட்டிய பாசிப்பயறு - வேர்க்கடலை சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாலட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கப்
    தக்காளி - 1
    கொண்டைக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
    பேபி கார்ன் - 6 துண்டுகள்
    இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - பாதி



    செய்முறை :

    தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    பேபி கார்ன், கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி சுடு தண்ணீரில் 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாலக்கீரை, தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும்.

    மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கடைசியாக இந்துப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    என்றும் இளமையாக இருக்க தினமும் சாலட் சாப்பிடுவது நல்லது. இன்று, லிச்சி பழம், வெள்ளரிக்காய் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6,
    வெள்ளரிக்காய் - 1
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சம்பழம் - ஒன்று,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    லிச்சி பழம், வெள்ளரியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சையை பிழிந்து சாறு பிழிந்து வைக்கவும்.

    லிச்சிபழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.

    அதனுடன் உப்பு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

    சத்தான லிச்சி - வெள்ளரி சாலட் ரெடி.

    குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை - கால் கட்டு
    முட்டை - 2
    தக்காளி - 2
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.

    பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாலட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த சாலட்டில் பொட்டாசியம், மல்டிவிட்டமின்கள் நிறைந்துள்ளன. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரம் பழம் - 1
    ஆப்பிள் - 1
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடித்த நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.

    ஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.

    அடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.

    இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.

    20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும். இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் - கேரட் சாலட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய பீட்ரூட் - 1/2 கப்
    துருவிய கேரட் - ½ கப்
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    ஊறவைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
    மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

    பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.

    மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் மதிய உணவாக வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாப்பிடலாம். இன்று இந்த உணவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    கோஸ் - சிறிய துண்டு
    குடை மிளகாய் - பாதி
    தக்காளி - 1
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவையான அளவு
    சீரகத்தூள் - தேவையான அளவு
    பிளாக் சால்ட் - சிறிதளவு.



    செய்முறை :

    அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறிய அவலை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சி, துருவிய கேரட், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கவும்.  

    சூப்பரான வெஜிடபிள் அவல் மிக்ஸ் ரெடி.

    பலன்கள்:  சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு - 2 தேக்கரண்டி
    பனி வரகு - 2 தேக்கரண்டி
    தினை - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
    முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

    வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு - 2 தேக்கரண்டி
    பனி வரகு - 2 தேக்கரண்டி
    தினை - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
    முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

    வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் செய்யப்படும் கோசுமல்லி என்கிற கோசும்பரி உடல் நலத்திற்கும் உகந்தது.
    கோசுமல்லி அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.

    செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், கேரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.

    தேவையானப்பொருட்கள் :

    கேரட் (நடுத்தர அளவு) - 2
    பயத்தம் பருப்பு - 1/2 கப்
    பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.

    கேரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.

    கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

    ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.

    தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கேரட் கலவையில் கொட்டவும்.

    ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, கேரட்டுடன் சேர்க்கவும்.

    அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மாவை அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மா, கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1 கப்
    குடை மிளகாய் ( மஞ்சள், சிகப்பு, பச்சை) - தலா 1
    உதிர்த்த சோளம் - கால் கப்
    சீரகத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு  - 2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    சோளத்தை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, சோளம் போட்டு அதனுடன் குடைமிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைசாறு, தேன், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்து நிறைந்த ராஜ்மா - கார்ன் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    சர்க்கரை நோயாளிகள் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு காய்கறி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1
    வெள்ளரிக்காய் - 1,
    கேரட் - 1
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    பனிவரகை நன்றாக சுத்தம் செய்து இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பனிவரகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×