search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaccine"

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இது வரை 57 லட்சத்து 65 ஆயிரத்து 918 டோஸ் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 75 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தபபட்டுள்ளது.

    75 நாட்களுக்கு மட்டும் அரசு மையங்களில் இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசியை போட்டு வருகிறார்கள்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டது.
    • மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும் இன்று ஏராளமான இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

    இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள முகாமிற்கு சென்று உரிய தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

    பூஸ்டர் டோஸ்

    மாநகரப் பகுதியில் பெரும்பாலான முகாம்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு இன்னும் சுமார் 10 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

    இதேபோல், இருதவணை தடுப்பூசி செலுத்திய பெரும்பாலானோர் இன்னும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை. மாநகர பகுதியில் மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் இன்று காலை சிலர் தடுப்பூசி போட வந்திருந்தனர். அவர்களுக்கு நர்சுகள் தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான சந்திப்பு ரெயில் நிலையத்திலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    காரணம் என்ன?

    மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.
    • கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது. அதற்கான முகாம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது. இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசியை அலுவலர்கள் செலுத்தி கொள்ளலாம்.

    கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் ேடாஸ் செலுத்தி 84 நாளுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதம் முடிந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம். கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணத்தை தவறாமல் எடுத்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
    • அவசியமாக போட்டு கொள்ள வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு பயிலும் 8,335 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் 5 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மொத்தம் 17,583 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரணஜென்னி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மேற்கண்ட மாணவ-மாணவிகள் தவிர்க்காமல் அவசியமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் மொத்தம் 128 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
    • வெள்ளகோவிலில் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 128 இடங்களில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, 2ம் தவணை கொரோனா தடுப்பு ஊசியும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    நேற்று முன்தினம் வரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 6 ஆயிரத்து266 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 5 ஆயிரத்து 41 நபர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 75 ஆயிரத்து 166 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 64 ஆயிரத்து 319 நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி 1 ஆயிரத்து 209 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    • தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
    • உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சையில் இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் இன்று 3471 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் போடப்பட்டுள்ளது. 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.

    தற்போது மாவட்டத்தில் 143 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21513 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிர் இழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

    தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விரைவில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

    உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கடும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வருவதால் ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை.

    சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன் அதனை ஒட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காலரா பாதிப்பு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

    எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    இவர்களின் வசதிக்காக வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 10-ந் தேதி நடைபெறும் முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா–மொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர். மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
    • புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு தீவிரமாக இல்லை

    நெல்லை:

    தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று 500-ஐ தாண்டி உள்ளது. இதைத்தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    குறிப்பாக பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் அடுத்த 2 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

    இந்நிலையில் இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 9 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 7 பேர் அடங்குவர். இதுதவிர களக்காடு, மானூர் பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    புதிதாக 7 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 6 பேரும் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    நெல்லையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. எனினும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு தீவிரமாக இல்லை. எனவே பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெறுகிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி, கொரோனா வார்டில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்.

    புதிய பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டாலும் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நடைபெற உள்ளது.

    வீ. கே. புதூர்:

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2004 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள்,

    2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் காலை, நண்பகல்,பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ள வார்டு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை செலுத்தாதவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் ‘டேமிபுளூ’ மாத்திரைகளும் 2 லட்சம் தடுப்பூசிகளும் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #Swineflu #TamilNadu #JRadhakrishnan
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    தமிழக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை சுகாதார பணிகளில் தோய்வு ஏற்பட்டு குப்பைகள் வீதிகளில் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதும், பொது சுகாதாரத்திற்கு சவால் விடும் நிலையாக உள்ளது.

    சாலையோரமும், தெரு ஓரமும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்பும் நிலையும் காணப்படுவதால் சுகாதாரத்துறையின் நடவடிக்கை முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எட்டவில்லை.

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வருவதால் பருவ காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த திணறி வருகிறார்கள்.

    தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்காததால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அரசு நிறுவனங்கள், தனியார், நிறுவனங்கள், பொதுமக்கள் குடி தண்ணீரை சேகரித்து வைக்கும் போது அதனை மூடி வைக்க வேண்டும். மொட்டை மாடி மற்றும், காலி மனைகளில் தேங்கும் மழைநீரில் இருந்து டெங்கு கொசு உருவாகிறது.

    அதுபோல கட்டுமான பணி இடங்களில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீரில் இருந்தும் கொசுக்கள் உருவாகின்றன. நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்களை அழிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகின்றன.

    திருமண மண்டபம், ஓட்டல், மருந்துக்கடை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள சங்கத்தினர், பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து டெங்கு கொசுக்களை அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பைகழிவுகள் தேங்கி இருப்பதை அகற்றி அங்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு ஆகியவற்றை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2500 பேர் இதுவரையில் டெங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 30 பேரில் இருந்து 50 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

    பன்றி காய்ச்சல் தினமும் 5 பேர் முதல் 20 பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. பன்றி காய்ச்சலை பொறுத்த வரையில் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவினாலே இந்நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பொது இடங்களுக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக கை கழுவினால் அந்த வைரஸ் தொற்று ஏற்படாது,

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் ‘டேமிபுளூ’ மாத்திரைகள் தயாராக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவர்கள் கூட தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட துணை இயக்குனரை அணுகி மாத்திரைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.



    பன்றி காய்ச்சலுக்கு புதிய வகையான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியா ளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 50 ஆயிரம் தடுப்பூசி தற்போது கையிருப்பு உள்ளது, மேலும் 1½ லட்சம் தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது.

    இதுதவிர 11 ஆயிரம் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளன. மேலும் 33 ஆயிரம் கவச உடைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு முகமுடி 3½ லட்சம் இருப்பு உள்ளன.

    மேலும் திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால் போன்ற மக்கள் கூடும் இடங்களில் 5 சதவீதம் ‘‘லைசால்’’ பயன்படுத்தி அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கி உள்ளோம். அனைத்து மதத்தினரும் கோவில் திருவிழா மற்றும் பொது இடங்களுக்கு சென்று வரும்போது கண்டிப்பாக கைகழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இருமல், தும்மல் வந்தால் மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் 1100 செல் கவுண்டர்கள் ரத்த அணுக்களை கண்டுபிடிக்க அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஒரு நிமிடத்தில் எவ்வளவு ரத்த அணுக்கள் உடலில் உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். இதுதவிர டெங்குவை கண்டுபிடிக்கும் ‘‘எலிசா’’ சோதனை மையம் 125 இடங்களில் உள்ளன. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 48 மணிநேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் எவ்வித உயிர் இழப்பும் ஏற்படாது. தனியாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது. டாக்டரை அணுக வேண்டும்.

    பருவகாலத்தில் ஏற்படக் கூடிய காய்ச்சல் 98 சதவீதம் முழுமையாக குணமடையக் கூடியதாக இருந்த போதிலும் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து கவனக் குறைவாக இருப்பதாலும் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வராததாலும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    இதுவரையில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும் உயிர் இழந்துள்ளனர்.பரிசோதனை உறுதி செய்யப்படாதநிலையில் 5 பேர் உயிர் இழந்தனர்.

    மருத்துவமனைக்கு காலம் கடந்து வருவது மற்றும் வேறு நோய்கள் பாதிக்கப்பட்டோருக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கமும் இருந்து உயிர் இழப்பும் ஏற்படுவதை கண்டுபிடிக்க தணிக்கை குழு ஒன்று போடப்பட்டுள்ளது.

    ஆதலால் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகினால் எவ்வித பயமும் கொள்ளத்தேவையில்லை. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்க பொதுநல அமைப்புகள், அனைத்து சங்ககங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu #TamilNadu #JRadhakrishnan
    ×